சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் |
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மலையாள முன்னணி நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் முன்னணி நடிகர் திலீப் உள்பட 9 பேர் செய்யப்பட்டனர். இதில் திலீப் மட்டும் ஜாமீனில் விடுதலையாகி உள்ளார்.
இந்த வழக்கு எர்ணாகுளம் தனி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், தனி நீதிமன்றத்தில் முறையான விசாரணை நடக்கவில்லை என்றும், வழக்கை திசை திருப்ப முயற்சி நடக்கிறது என்றும் கூறி, பாதிக்கப்பட்ட நடிகை சார்பில் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம் நடிகைக்கு கண்டம் தெரிவித்தது. எந்த அடிப்படையில் தனி நீதிமன்றத்தின் மீது புகார் கூறுகிறீர்கள்? அதற்கான ஆதாரங்கள் இருக்கிறதா? போலீசிடம் உள்ள ஆதாரங்கள் வழக்கறிஞருக்கு எப்படி கிடைக்கும் என சரமாரி கேள்விகளை கேட்ட நீதிமன்றம் . தனி நீதிமன்றத்தின் மீது தேவையில்லாமல் புகார் கூறினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தது. அதன்பின் மனு மீதான விசாரணையை 29ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டது.