இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
தமிழ், தெலுங்கு மட்டுமல்லாது ஹிந்தியிலும் மாறிமாறி பிசியாக நடித்து வருகிறார் விஜய்சேதுபதி.. அதேசமயம் கடந்த மூன்று வருடங்களுக்கு முன் ஜெயராம் நடித்த மார்க்கோனி மத்தாய் என்கிற படத்தின் மூலம் மலையாள திரையுலகில் நுழைந்த அவர், அதையடுத்து மலையாளத்தில் தனது இரண்டாவது படமாக 19(1)(a) என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்து வி.எஸ் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் கதாநாயகியாக நித்யா மேனன் நடித்துள்ளார். 96 புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.
இந்தப்படத்தில் விஜய்சேதுபதி தமிழ்நாட்டை சேர்ந்த அதேசமயம் சூழ்நிலை காரணமாக கேரளாவில் குடியிருக்கும் எழுத்தளார் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். குறிப்பாக இந்தப்படத்தின் டைட்டிலுக்கேற்றபடி கருத்து சுதந்திரம் பற்றி இந்தப்படம் பேசுகிறது. இதன் படப்பிடிப்பு கடந்த வருடமே முடிவடைந்துவிட்ட நிலையில் சமீபத்தில் தான் ரிலீசுக்கான பணிகள் துவங்கப்பட்டன. இந்தநிலையில் இந்தப்படம் விரைவில் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் விரைவில் நேரடியாக வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.