ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு பிரபல மலையாள நடிகை கடத்தப்பட்டு காரில் பாலியல் ரீதியாக சித்தரவதை செய்யப்பட்ட வழக்கில் நடிகர் திலீப் எட்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு கைதானார். மூன்று மாத சிறைவாசத்திற்கு பிறகு ஜாமீனில் வெளியே வந்தார். இந்த வழக்கு அவ்வப்போது பரபரப்பாக நடப்பதும் பின்பு அப்படியே அமுக்கி விடுவதும் கடந்த வருடங்களில் வாடிக்கையாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்த வழக்கை விரைந்து முடிக்க நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
அதேசமயம் தற்போது இந்த வழக்கை விசாரிக்கும் விசாரணை அதிகாரி இந்த வழக்கில் அலட்சியப் போக்குடன் செயல்படுவதாகவும் மேலும் இதில் அரசியல் குறுக்கீடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட நடிகை சமீபத்தில் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் அந்த மனுவில் ஒரு பெண் நீதிபதியை குறிப்பிட்டு இந்த வழக்கு விசாரணையில் அவர் பாரபட்சமாக நடந்து கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் நடிகர் திலீப் தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி விசாரணையின் போக்கை மாற்ற முயற்சிப்பதாகவும் அதனால் தற்போது விசாரணை தடம்புரண்டு செல்வதாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார் பாதிக்கப்பட்ட நடிகை.