ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு | 30 லட்சம் பேரை பிளாக் செய்த அனுசுயா பரத்வாஜ் | தனி இடத்தை பிடிப்பதற்காக சவால்களை எதிர்கொள்கிறேன் : பிந்து மாதவி | கோவையில் அடுத்தடுத்த நாள் இசை நிகழ்ச்சி நடத்தும் வித்யாசாகர், விஜய் ஆண்டனி | ஆக., 1ல் யு-டியூபில் “சித்தாரே ஜமீன் பர்” : யு-டியூபில் படத்தை வெளியிடுவது ஏன்? ஆமீர்கான் விளக்கம் | பிளாஷ்பேக் : கே.பாலச்சந்தரை ஏமாற்றிய 'கல்யாண அகதிகள்' | பிளாஷ்பேக்: லதா மங்கேஷ்கர் பாடலை புறக்கணித்த தமிழ் சினிமா |
தெலுங்கில் கடந்த 2014ம் ஆண்டு வெளியான படம் மனம். இந்தப்படத்தில் நாகேஸ்வர ராவ், நாகார்ஜுனா, நாக சைதன்யா என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தலைமுறை நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் நாகசைதன்யா, சமந்தா இருவரும் இரண்டு வேடங்களில் நடித்திருந்தனர். விக்ரம் குமார் படத்தை இயக்கியிருந்தார்.
இப்படம் வெளியாகி 8 ஆண்டுகள் ஆனதையடுத்து இயக்குனர் விக்ரம் குமாருடன் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை பகிர்ந்த நாக சைதான்யா, ‛மனம் படத்திற்கு பிறகு எட்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் விக்ரம்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பது மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக' தெரிவித்துள்ளார். தற்போது விக்ரம் குமார் இயக்கும் தேங்க்யூ என்ற படத்தில் நாக சைதன்யா நடிக்க அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார்.