வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் | விஜய் மில்டன் படத்தில் சுனில் | 'முத்த மழை' சர்ச்சை பற்றி எதுவும் பேசாத தீ | ஒன்றரை லட்ச ரூபாய் 'டி ஷர்ட்' அணிந்த மகேஷ்பாபு | முன்னணி இயக்குனர்களின் தோல்வி : வருத்தத்தில் தமிழ் சினிமா | பிளாஷ்பேக்: 'சிறை'யின் குறைகள் | பிளாஷ்பேக் : ஆணாக அறிமுகமான விஜய நிர்மலா | 'குபேரா' படத்திற்கு அழுத்தம் கொடுத்த ஓடிடி நிறுவனம் |
தெலுங்கில் கடந்த 2014ம் ஆண்டு வெளியான படம் மனம். இந்தப்படத்தில் நாகேஸ்வர ராவ், நாகார்ஜுனா, நாக சைதன்யா என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தலைமுறை நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் நாகசைதன்யா, சமந்தா இருவரும் இரண்டு வேடங்களில் நடித்திருந்தனர். விக்ரம் குமார் படத்தை இயக்கியிருந்தார்.
இப்படம் வெளியாகி 8 ஆண்டுகள் ஆனதையடுத்து இயக்குனர் விக்ரம் குமாருடன் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை பகிர்ந்த நாக சைதான்யா, ‛மனம் படத்திற்கு பிறகு எட்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் விக்ரம்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பது மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக' தெரிவித்துள்ளார். தற்போது விக்ரம் குமார் இயக்கும் தேங்க்யூ என்ற படத்தில் நாக சைதன்யா நடிக்க அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார்.