என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் | சுவர் ஏறி குதித்து குழந்தையை காப்பாற்றிய திஷா பதானியின் தங்கை : குவியும் பாராட்டுக்கள் | 18வது திருமண நாளில் 'பேமிலி' புகைப்படத்தைப் பகிர்ந்த ஐஸ்வர்யா ராய் | மகேஷ்பாபுவுக்கு நேரில் ஆஜராக அமலாக்கத் துறை நோட்டீஸ் | கதை நாயகனாக நடிக்கும் 'காக்கா முட்டை' விக்னேஷ் | 'நிழற்குடையில்' கதை நாயகியாக நடிக்கும் தேவயானி | கால் பாதத்தை டீ ஸ்டாண்ட் ஆக மாற்றிய மம்முட்டி ; வைரலாகும் புகைப்படம் | த்ரிஷ்யம்-3க்கு முன்பாக புதிய படத்தை ஆரம்பித்த ஜீத்து ஜோசப் |
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் வடிவேலு. இம்சை அரசன் 24-ம் புலிகேசி படம் தொடர்பாக எழுந்த சர்ச்சையில் அவர் புதிய படங்களில் நடிக்க தயாரிப்பாளர்கள் சங்கம் தடை விதித்ததால் அவர் படங்களில் நடிக்காமல் இருந்தார். தற்போது அந்த பிரச்சினை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட்டுள்ளது.
அதையடுத்து வடிவேலு மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுக்கத் தயாராகி உள்ளார். இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் என்ற படத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தலைப்பில் சிறு சிக்கல் ஏற்பட்டுள்ளது. காமெடி நடிகர் சதிஷ் மற்றும் குக் வித் கோமாளி பவித்ரா நடிப்பில் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் புதிய படம் உருவாக உள்ளத்து. அந்தப் படத்தை கிஷோர் ராஜ்குமார் என்பவர் இயக்க உள்ளார். அந்தப் படத்திற்கும் நாய் சேகர் என்று தான் தலைப்பு வைத்துள்ளார்களாம்.
நாய் சேகர் என்ற தலைப்பு ஏஜிஎஸ் நிறுவனம் கைவசம் இருப்பதாகவும் வடிவேலு அந்தப் பெயரை என் படத்துக்காக விட்டுக்கொடுங்கள் என்று கேட்டதாகவும் கூறப்படுகிறது. எனவே வடிவேலு படத்திற்கு நாய் சேகர் தலைப்பு கிடைக்குமா என்பதில் சந்தேகம் நிலவி வருகிறது. தற்போதைய தகவல்படி நாய் சேகர் தலைப்பை ஏஜிஎஸ் நிறுவனம் விட்டுக் கொடுப்பதாக இல்லையாம். எனவே மீண்டும் நாய் சேகர், வடிவேலுவின் நாய் சேகர் போன்ற தலைப்புகளை வடிவேலு படக்குழு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.