லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
நயன்தாராவைத் தொடர்ந்து வாலு படத்தில் நடித்தபோது ஹன்சிகாவையும் காதலித்தார் சிம்பு. அதையடுத்து அவர்கள் திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நயன்தாராவைப்போலவே ஹன்சிகாவும் சிம்புவின் காதலை முறித்துக்கொண்டு வெளியேறிவிட்டார்.
அதேபோல்தான் ஜெய்யும் சில ஆண்டுகளாக அஞ்சலியுடன் கிசுகிசுக்கப்பட்டு வந்தார். இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும், ரகசியமாக குடும்பம் நடத்தி வருவதாகவும்கூட சொல்லப்பட்டது. ஆனால் பின்னர் அவர்களது காதலும் முறிந்து போனது.
இப்படியான நிலையில் தமிழ்த்திரைப்பட பத்திரிகையாளர் சங்கத்தின் விழாவில் கலந்து கொண்ட ஜெய், தனது திருமணம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், சிம்பு திருமணம் செய்து கொண்ட பிறகுதான் நான் திருமணம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்துள்ளேன். அநேகமாக சிம்புவின் திருமணம் அடுத்த ஆண்டில் நடக்கும் என்று எதிர்பார்க்கிறேன். அதனால் அதன்பிறகு எனது திருமணம் நடக்கும், என்று தெரிவித்தார்.
அதோடு, பகவதி படத்திற்கு பிறகு விஜய்யுடன் இணைந்து நடிக்க அவரிடத்தில்100, 150 தடவை சான்ஸ் கேட்டு விட்டேன். ஆனால் அவரோ, நீதான் ஹீரோவாகி விட்டாயே, அப்புறம் ஏன் கேரக்டர் ரோல்ல நடிக்க ஆசைப்படுறே? என்று சொல்லி விட்டார் என்றார் ஜெய்.