டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

நயன்தாராவைத் தொடர்ந்து வாலு படத்தில் நடித்தபோது ஹன்சிகாவையும் காதலித்தார் சிம்பு. அதையடுத்து அவர்கள் திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நயன்தாராவைப்போலவே ஹன்சிகாவும் சிம்புவின் காதலை முறித்துக்கொண்டு வெளியேறிவிட்டார்.
அதேபோல்தான் ஜெய்யும் சில ஆண்டுகளாக அஞ்சலியுடன் கிசுகிசுக்கப்பட்டு வந்தார். இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும், ரகசியமாக குடும்பம் நடத்தி வருவதாகவும்கூட சொல்லப்பட்டது. ஆனால் பின்னர் அவர்களது காதலும் முறிந்து போனது.
இப்படியான நிலையில் தமிழ்த்திரைப்பட பத்திரிகையாளர் சங்கத்தின் விழாவில் கலந்து கொண்ட ஜெய், தனது திருமணம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், சிம்பு திருமணம் செய்து கொண்ட பிறகுதான் நான் திருமணம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்துள்ளேன். அநேகமாக சிம்புவின் திருமணம் அடுத்த ஆண்டில் நடக்கும் என்று எதிர்பார்க்கிறேன். அதனால் அதன்பிறகு எனது திருமணம் நடக்கும், என்று தெரிவித்தார்.
அதோடு, பகவதி படத்திற்கு பிறகு விஜய்யுடன் இணைந்து நடிக்க அவரிடத்தில்100, 150 தடவை சான்ஸ் கேட்டு விட்டேன். ஆனால் அவரோ, நீதான் ஹீரோவாகி விட்டாயே, அப்புறம் ஏன் கேரக்டர் ரோல்ல நடிக்க ஆசைப்படுறே? என்று சொல்லி விட்டார் என்றார் ஜெய்.




