பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தற்போது சந்தீப் கிஷன் நடிப்பில் சிக்மா என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்த நிலையில் தற்போது நடிகர் விஜய்யின் சித்தி மகனும், ஜேசன் சஞ்சயின் சித்தப்பாவுமான நடிகர் விக்ராந்த் அளித்துள்ள ஒரு பேட்டியில், ஜேசன் சஞ்சய் இயக்குனராகி இருப்பதை தான் வரவேற்பதாக தெரிவித்துள்ளார். அதோடு, அவர் வெளிநாட்டில் படித்து வரும்போதே அவரை ஹீரோவாக நடிக்க வைக்க பல நிறுவனங்களும், இயக்குனர்களும் படையெடுத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் ஜேசன் சஞ்சய் ஹீரோவாக நடிக்க விரும்பவில்லை . இயக்குனராகத்தான் சினிமாவில் அறிமுகமாவேன் என்பதில் உறுதியாக இருந்தார். குறிப்பாக தனது தந்தை பெரிய ஸ்டார் நடிகராக இருந்தபோதும் அவர் பெயரை பயன்படுத்தி தான் சினிமாவில் வளர வேண்டும் என்று அவர் விரும்பவில்லை. தனது தனித் திறமையால் சினிமாவில் வெற்றி பெற வேண்டும் என்று அவர் நினைக்கிறார். அவரது இந்த எண்ணமும் முயற்சியுமே அவருக்கு கண்டிப்பாக வெற்றியை கொடுக்கும் என்று தெரிவித்துள்ளார் விக்ராந்த்.