பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தில் நடித்து வந்தார் நடிகர் வடிவேலு. ஆனால் படப்பிடிப்பு தளத்தில் சிம்புதேவன் - வடிவேலு இடையே ஏற்பட்ட பிரச்னையால் படப்பிடிப்பு நின்றுபோனது. இதன் காரணமாக தனக்கு பெரிய இழப்பு ஏற்பட்டதாக வடிவேலு மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தார் ஷங்கர். இதுகுறித்த பஞ்சாயத்துக்கள் நடந்து வந்ததால் வடிவேலு சில காலம் படத்தில் நடிக்காமல் இருந்தார். சமீபத்தில் இப்பட பிரச்னை தீர்ந்ததால் மீண்டும் படங்களில் நடிக்க உள்ளார் வடிவேலு. முதலாவதாக சுராஜ் இயக்கும் நாய் சேகர் படத்தில் நடிப்பதற்கு தயாராகி வருகிறார். இதை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.
இந்நிலையில் வடிவேலு காமெடியனாக நடித்த படங்களில் பி.வாசு இயக்கத்தில் ரஜினி நடித்த சந்திரமுகி முக்கியமான படம். இந்த படத்தில் ரஜினியுடன் வடிவேலு இணைந்து நடித்த காமெடி காட்சிகள் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டன. தற்போது பி.வாசு இயக்கும் சந்திரமுகி 2 படத்தில் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்க இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், சந்திரமுகி படத்தில் முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகத்திலும் வடிவேலு முக்கிய காமெடியனாக இடம்பெறப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதோடு முதல் பாகத்திற்கு எந்த வகையிலும் குறைவில்லாத வகையில் வடிவேலுவுக்கான காமெடி காட்சிகளை உருவாக்கும் பணியில் தற்போது பி.வாசு ஈடுபட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன .