திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
சுதா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் கடந்த ஆண்டில் ஓடிடி தளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் சூரரை போற்று. இப்படத்தை ஹிந்தியிலும் சுதா இயக்கத்தில் ரீமேக் செய்யப் போவதாக சூர்யாவின் 2டி நிறுவனம் அறிவித்திருந்தது. ஆனால் சூரரைப்போற்று படத்தின் இணை தயாரிப்பு நிறுவனமான சீக்யா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தது. அதில் 2 டி என்டர்டைன்மென்ட் நிறுவனமும், அபுன் தாண்டியா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து சூரரைப்போற்று படத்தின் இந்தி ரீமேக்கை தயாரிப்பதற்கு தடை விதிக்குமாறு மனு தாக்கல் செய்து தடை கோரியது.
அதை தொடர்ந்து அப்படத்திற்கு தற்காலிகமாக தடை விதித்தது நீதிமன்றம். இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி சூரரைப்போற்று படத்தை தயாரித்த 2 டி எண்டர்டெயின்மெண்ட் தாக்கல் செய்த ஆவணங்களை ஏற்றுக்கொண்டு அப்படத்தின் மீது தொடரப்பட்டிருந்தது தடையை நீக்கி உத்தரவிட்டார். இதனால் சூரரை போற்று படத்தின் இந்தி ரீமேக் விரைவில் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.