'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு | பிளாஷ்பேக்: நடிகையின் பிரச்னையை பேசிய முதல் படம் | தமிழில் 4 ஆண்டுக்கு பின் நாயகியாக நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன் | எனக்கு பாராட்டு விழா வேணாம்: தயாரிப்பாளர் தாணு | வீட்டை வைத்து கடன் வாங்கி படம் தயாரித்ததுஏன்? ஆண்ட்ரியா | 'வாழு, வாழ விடுங்கள்': கிண்டல், கேலிகளுக்கு கீர்த்தி சுரேஷ் பதில் | அஜித் அடுத்த பட அறிவிப்பு - தொடரும் தாமதம் |

மெர்சல் படத்திற்கு பிறகு இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படத்தில் நடித்தார் வடிவேலு. ஆனால் சில பிரச்னைகளால் படப்பிடிப்பு நின்றுபோனது. அதையடுத்து அந்த படத்திற்கு தனக்கு பல கோடி நஷ்டமாகிவிட்டது. அதை வடிவேலு தான் ஈடுகட்ட வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார் ஷங்கர். இந்த விவகாரத்தில் வடிவேலு சில ஆண்டுகள் நடிக்காமல் இருந்தார். சமீபத்தில் இந்த பிரச்னை தீர்ந்தது. இதனால் மீண்டும் புதிய படங்களில் நடிக்க தயாராகிக் கொண்டிருக்கும் வடிவேலு மீண்டும் வெளி உலகில் அதிகமாக காணப்படுகிறார். சில பிரபலங்கள் வடிவேலுவை சந்தித்த போட்டோக்கள் சமூகவலைதளங்களில் வெளியானது.
இந்நிலையில் தொகுப்பாளினி அகல்யா வெங்கடேசனும் வடிவேலுவை சந்தித்துள்ளார். அப்போது அவரிடத்தில், எனது பெயரை ஒரேயொரு முறை உங்க ஸ்டைலில் சொல்லுங்க என்று அவர் கேட்க, அகல்யா வெங்கடேசன் என்ற அந்த பெயரை தனது பாணிலேயே கிண்டலாக அவரை கலாய்த்தபடி சொல்கிறார் வடிவேலு. இந்த வீடியோவை தனது சோசியல் மீடியா பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார் அகல்யா. இதற்கு இந்த மனுஷன இப்படி பார்த்து எவ்வளவு நாளாச்சு என ரசிகர்கள் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.




