பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
தமிழகத்தில் ஆக., 23 முதல் 50 சதவீதம் இருக்கைகளுடன் தியேட்டர்கள் திறக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதனால் தியேட்டர் உரிமையாளர்களை மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கொரோனாவால் சினிமா தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது அலையில் ஏப்ரல் மாதக் கடைசியில் இருந்து தமிழகத்தில் உள்ள சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. கடந்த நான்கு மாதங்களாக மூடப்பட்டிருந்த தியேட்டர்களை விரைவில் திறக்க அரசு அனுமதி கொடுக்கும் என்ற நம்பிக்கை திரையுலகத்தில் எழுந்துள்ளது. இதுதொடர்பாக தியேட்டர் உரிமையாளர்கள் தொடர்ந்து தமிழக அரசிடம் பேசி வந்தனர்.
இந்நிலையில் ஆக., 23 முதல் தியேட்டர்கள் 50 சதவீதம் இருக்கைகளுடன் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதேசமயம் கொரோனா விதிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என தியேட்டர் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக தியேட்டர்கள் ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போட்டிருப்பதை உறுதி செய்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக அரசின் இந்த அறிவிப்பால் தியேட்டர் உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து ஓடிடி பக்கம் சாய்ந்த சில தியாரிப்பாளர்கள் தங்களது திரைப்படங்களைத் தியேட்டர்களில் வெளியிடுவதற்கான ஆரம்பக் கட்ட வேலைகளை ஆரம்பித்துள்ளனர். அதேசமயம் முன்பு போல வாரத்திற்கு நான்கைந்து படங்கள் வெளிவருவதற்கான வாய்ப்பில்லை. மேலும் மக்களும் கொரோனா அச்சத்தை தாண்டி தியேட்டர்களுக்கு வருவார்களா என்பது வரும் நாட்களில் தெரிந்துவிடும். தற்போதைய சூழலில் முன்னணி நடிகர்களின் படங்கள் தியேட்டரில் வெளியான ஓரளவுக்கு ரசிகர்களும் வருவார்கள் என தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.