ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
தமிழகத்தில் ஆக., 23 முதல் 50 சதவீதம் இருக்கைகளுடன் தியேட்டர்கள் திறக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதனால் தியேட்டர் உரிமையாளர்களை மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கொரோனாவால் சினிமா தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது அலையில் ஏப்ரல் மாதக் கடைசியில் இருந்து தமிழகத்தில் உள்ள சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. கடந்த நான்கு மாதங்களாக மூடப்பட்டிருந்த தியேட்டர்களை விரைவில் திறக்க அரசு அனுமதி கொடுக்கும் என்ற நம்பிக்கை திரையுலகத்தில் எழுந்துள்ளது. இதுதொடர்பாக தியேட்டர் உரிமையாளர்கள் தொடர்ந்து தமிழக அரசிடம் பேசி வந்தனர்.
இந்நிலையில் ஆக., 23 முதல் தியேட்டர்கள் 50 சதவீதம் இருக்கைகளுடன் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதேசமயம் கொரோனா விதிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என தியேட்டர் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக தியேட்டர்கள் ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போட்டிருப்பதை உறுதி செய்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக அரசின் இந்த அறிவிப்பால் தியேட்டர் உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து ஓடிடி பக்கம் சாய்ந்த சில தியாரிப்பாளர்கள் தங்களது திரைப்படங்களைத் தியேட்டர்களில் வெளியிடுவதற்கான ஆரம்பக் கட்ட வேலைகளை ஆரம்பித்துள்ளனர். அதேசமயம் முன்பு போல வாரத்திற்கு நான்கைந்து படங்கள் வெளிவருவதற்கான வாய்ப்பில்லை. மேலும் மக்களும் கொரோனா அச்சத்தை தாண்டி தியேட்டர்களுக்கு வருவார்களா என்பது வரும் நாட்களில் தெரிந்துவிடும். தற்போதைய சூழலில் முன்னணி நடிகர்களின் படங்கள் தியேட்டரில் வெளியான ஓரளவுக்கு ரசிகர்களும் வருவார்கள் என தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.