எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
லிங்குசாமி தெலுங்கில் இயக்கி வரும் படத்தில் நதியா நடித்து வருகிறார். இதில் ராம் பொத்ததேனி, கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்கள். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்துவருகிறது.
இந்த படப்பிடிப்பில கலந்து கொள்கிறவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுவது வழக்கம். அதன்படி நதியாவுக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையின் முடிவில் அவருக்கு நெகட்டிவ் ரிசல்ட் வந்தது. சில நாட்கள் நடித்து விட்டு மும்பைக்கு திரும்பியபோதும் சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்த தகவல் அவருக்கு தெரிவிக்கப்பட்ட உடன். அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ததில் தாய், தந்தை மற்றும் 2 பணியாளர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நதியா கூறியிருப்பதாவது: நான் ரெண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டு விட்டேன். பிறகு எனக்கு எப்படி கொரோனா வந்தது என்றே தெரியவில்லை. என்னோட அப்பா, அம்மா, வீட்ல வேலை செய்றவங்கனு நாலு பேருக்கு கொரோனா தொற்று இருக்கிறது. அனைவரும் வீட்டுக்குள்ளேயே தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறோம். என்கிறார் நதியா.