கமல்ஹாசன் உடன் இணைந்து நடிக்க ஆசைப்படும் மிருணாள் தாகூர் | ஜெய் ஜோடியாக மீனாட்சி கோவிந்தராஜன் : காதல், திரில்லர் படமாக உருவாகிறது | அஜித்தின் அடுத்த படத்தை இயக்குகிறாரா தனுஷ்? | சர்ச்சையை கிளப்பிய நானியின் டாட்டூ வார்த்தை | கதாநாயகனாக மாறிய பிரேமலு காமெடி நடிகர் | அய்யப்பனும் கோஷியும் இயக்குனரின் கனவு படத்தை நிறைவு செய்த பிரித்விராஜ் | கூலி பட டீசர் மார்ச் 14ல் வெளியாவதாக தகவல் | அமரன் படத்துக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம் | ஐதராபாத்தில் சூர்யா 45வது படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு | கேங்கர்ஸ் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு |
சோசியல் மீடியாவில் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வீடியோக்களை வெளியிட்டு வந்த நடிகை மீரா மிதுன், சமீபத்தில் பட்டியலினத்தவரை தவறாக சித்தரித்து ஒரு வீடியோ வெளியிட்டார். அதையடுத்து விசிக.,வின் வன்னி அரசு அவர் மீது காவல்துறையில் புகார் அளித்தார். அதையடுத்து மீரா மிதுன் மீது 7 பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார் அவரை ஆஜராகும்படி சம்மன் அனுப்பினர். ஆனால் மீரா மிதுனோ அதை ஏற்காமல், என்னை யாரும் கைது செய்ய முடியாது என்று மற்றொரு வீடியோவை வெளியிட்டார்.
இந்தநிலையில், தலைமறைவான மீராமிதுனை சைபர்கிரைம் போலீசார் கேரளாவில் நேற்று (ஆக.,14) கைது செய்தனர். அவரை கைது செய்யச் சென்றபோதும் போலீசாரிடம் தற்கொலை மிரட்டல் விடுத்த மீராமிதுனை பெண் போலீசார் மடக்கி கைது செய்துள்ளனர். இந்நிலையில், மீரா மிதுன் கைது குறித்து அவரது சக பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான நடிகை சனம் ஷெட்டி தனது டுவிட்டரில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், மீரா மிதுனை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சரியான நடவடிக்கை எடுத்திருக்கிறார். கடந்த சில வருடங்களாக நாங்கள் சகித்துக் கொண்டு வந்த அனைத்து வெறுக்கத்தக்க பேச்சுக்களும் இனிமேல் முடிவுக்கு வந்து விடும் என்று பதிவிட்டுள்ளார்.