புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
சோசியல் மீடியாவில் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வீடியோக்களை வெளியிட்டு வந்த நடிகை மீரா மிதுன், சமீபத்தில் பட்டியலினத்தவரை தவறாக சித்தரித்து ஒரு வீடியோ வெளியிட்டார். அதையடுத்து விசிக.,வின் வன்னி அரசு அவர் மீது காவல்துறையில் புகார் அளித்தார். அதையடுத்து மீரா மிதுன் மீது 7 பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார் அவரை ஆஜராகும்படி சம்மன் அனுப்பினர். ஆனால் மீரா மிதுனோ அதை ஏற்காமல், என்னை யாரும் கைது செய்ய முடியாது என்று மற்றொரு வீடியோவை வெளியிட்டார்.
இந்தநிலையில், தலைமறைவான மீராமிதுனை சைபர்கிரைம் போலீசார் கேரளாவில் நேற்று (ஆக.,14) கைது செய்தனர். அவரை கைது செய்யச் சென்றபோதும் போலீசாரிடம் தற்கொலை மிரட்டல் விடுத்த மீராமிதுனை பெண் போலீசார் மடக்கி கைது செய்துள்ளனர். இந்நிலையில், மீரா மிதுன் கைது குறித்து அவரது சக பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான நடிகை சனம் ஷெட்டி தனது டுவிட்டரில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், மீரா மிதுனை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சரியான நடவடிக்கை எடுத்திருக்கிறார். கடந்த சில வருடங்களாக நாங்கள் சகித்துக் கொண்டு வந்த அனைத்து வெறுக்கத்தக்க பேச்சுக்களும் இனிமேல் முடிவுக்கு வந்து விடும் என்று பதிவிட்டுள்ளார்.