காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
சில ஆண்டுகளுக்கு முன்பு பிக்பாஸ் தர்ஷன், நடிகை சனம் ஷெட்டிக்கிடையே திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால் கடைசி நேரத்தில் அவரை திருமணம் செய்து கொள்ள மறுத்தார் தர்ஷன். இது அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதையடுத்து தர்ஷனை கடுமையாக விமர்சனம் செய்து வந்தார் சனம் ஷெட்டி.
இந்த நிலையில், நேற்று பார்க்கிங் பிரச்சினையில் நீதிபதி மகனுடன் ஏற்பட்ட மோதலில் தர்ஷன் கைது செய்யப்பட்டிருக்கிறார். இது பற்றி இணையப்பக்கத்தில் சனம் ஷெட்டி ஒரு வீடியோ பதிவு போட்டுள்ளார். அதில், தர்ஷனை கைது செய்து விட்டார்கள் என்ற செய்தியை கேட்டதும் ஒரு நொடி எனக்கு சந்தோஷமாக இருந்தது. அதேசமயம் தர்ஷன் இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால் என்ன செய்திருப்பேன் என்று யோசித்துப் பார்க்கிறேன். விசாரணை கூட நடத்தாமல் ஒரு தரப்பு மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஹாஸ்பிட்டலில் இருந்து பேட்டி கொடுத்த நீதிபதியின் மகன் சொன்னது தான் உண்மை என்றால், அதற்கு ஆதாரமாக சிசிடிவி புட்டேஜை வெளியிடலாமே. இரண்டு பேருக்கும் இடையே மோதல் நடைபெற்று இருக்கும் போது தர்ஷன் மீது மட்டும் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் தவறு செய்யாத நபர் தண்டனை அனுபவித்தால் அது மிகப்பெரிய குற்றமாகிவிடும் என்று தர்ஷனுக்கு ஆதரவாக தனது கருத்தை வெளியிட்டு இருக்கிறார் நடிகை சனம் ஷெட்டி.