சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

கன்னட சினிமாவை தொடர்ந்து தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்து வருகிறார் ருக்மணி வசந்த். இந்த நிலையில் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து வெளியான 'காந்தாரா சாப்டர்-1' படத்தின் மூலம் தற்போது இந்திய அளவில் கிரஷ் ஆகிவிட்டார் ருக்மணி வசந்த்.
இதையடுத்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், ''இதுவரை தென்னிந்திய நடிகையாக இருந்த நான் இந்த காந்தாரா சாப்டர்-1 படத்தின் மூலம் இந்திய நடிகை ஆகிவிட்டேன். இந்தப் படத்தின் மூலம் ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறேன். இது மிகுந்த உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. அதோடு தற்போது ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக பிரசாந்த் நீல் இயக்கும் 'டிராகன்' படம் மற்றும் யஷ் நடிக்கும் 'டாக்ஸிக்' போன்ற பான் இந்தியா படங்களிலும் நடித்து வருகிறேன். அதனால் இந்த படங்கள் திரைக்கு வரும்போது இன்னும் பெரிய அளவில் இந்திய ரசிகர்கள் மத்தியில் பேசப்படுவேன். இதன் காரணமாக அடுத்தடுத்து இந்த இடத்தை தக்க வைத்துக்கொள்ளும் வகையிலான பான் இந்தியா கதைகளை தேர்வு செய்யப் போகிறேன்'' என்று தெரிவித்திருக்கிறார் ருக்மணி வசந்த்.




