தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

'ஏஸ், மதராஸி' போன்ற படங்களில் நாயகியாக நடித்த ருக்மணி வசந்த் தற்போது கன்னடத்தில் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருக்கும் 'காந்தாரா சாப்டர்-1' படத்தில் நடித்திருக்கிறார். காந்தாரா படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதனால் தற்போது காந்தாரா சாப்டர்-1 படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று முன்தினம் கர்நாடகாவில் நடைபெற்றது.
அப்போது மேடையில் பேசிய ருக்மணி வசந்த், ''இந்த படத்தில் நடிப்பதற்கு எனக்கு வாய்ப்பு கொடுத்த ரிஷப் ஷெட்டிக்கு நன்றி. இந்த காந்தாரா சாப்டர்-1 படம் என்னை செல்லுலார் அளவில் மாற்றி இருக்கிறது. மேலும் கன்னடத்தில் நான் நடித்த 'சப்த சாகர தாட்சே' படத்தின் பிரிமியர் காட்சியின் போது என்னுடைய நடிப்பை ரிஷப் ஷெட்டி பாராட்டியது இன்னும் நினைவில் உள்ளது. அது ஒரு எமோஷனலான தருணமாகும்'' என்று பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டு மேடையிலேயே கண் கலங்கி இருக்கிறார் ருக்மணி வசந்த். இந்த காந்தாரா சாப்டர்-1 படம் வருகிற அக்டோபர் இரண்டாம் தேதி திரைக்கு வருகிறது.