சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் ராம் சரண். தற்போது 'பெத்தி' எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தனது மனைவி உபாசனா காமினேனி உடன் டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்துள்ளார்.
இதற்கான புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள ராம் சரண், உலகின் முதல் 'வில்வித்தை பிரிமியர் லீக்' போட்டிகள் வெற்றிகரமாக நிறைவடைந்ததற்காக பிரதமரை சந்தித்ததாக தெரிவித்துள்ளார்.
அவரது பதிவில், ''அனில் காமினேனி தலைமையிலான உலகின் முதல் வில்வித்தை பிரீமியர் லீக்கின் வெற்றி குறித்து நமது பிரதமர் மோடியை சந்தித்ததில் பெருமை அடைகிறேன். வில்வித்தையின் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கும் அதை உலகம் முழுவதும் ஊக்குவிப்பதற்கும் இது எங்கள் சிறிய படியாகும். அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் வாழ்த்துகள், இந்த அற்புதமான விளையாட்டில் இன்னும் பலர் இணைவார்கள் என்று நம்புகிறோம்'' எனப் பதிவிட்டுள்ளார்.
இச்சந்திப்பின்போது, பிரதமருக்கு திருப்பதி வெங்கடாஜலபதியின் சிலையை பரிசாக வழங்கினார் ராம்சரண்.




