காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் ராம் சரண். தற்போது 'பெத்தி' எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தனது மனைவி உபாசனா காமினேனி உடன் டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்துள்ளார்.
இதற்கான புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள ராம் சரண், உலகின் முதல் 'வில்வித்தை பிரிமியர் லீக்' போட்டிகள் வெற்றிகரமாக நிறைவடைந்ததற்காக பிரதமரை சந்தித்ததாக தெரிவித்துள்ளார்.
அவரது பதிவில், ''அனில் காமினேனி தலைமையிலான உலகின் முதல் வில்வித்தை பிரீமியர் லீக்கின் வெற்றி குறித்து நமது பிரதமர் மோடியை சந்தித்ததில் பெருமை அடைகிறேன். வில்வித்தையின் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கும் அதை உலகம் முழுவதும் ஊக்குவிப்பதற்கும் இது எங்கள் சிறிய படியாகும். அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் வாழ்த்துகள், இந்த அற்புதமான விளையாட்டில் இன்னும் பலர் இணைவார்கள் என்று நம்புகிறோம்'' எனப் பதிவிட்டுள்ளார்.
இச்சந்திப்பின்போது, பிரதமருக்கு திருப்பதி வெங்கடாஜலபதியின் சிலையை பரிசாக வழங்கினார் ராம்சரண்.