புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
மைக்கேல் ராயப்பன் தயாரித்த ‛அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தில் நடித்ததில் இருந்தே சிம்புவுடன் அவருக்கு மோதல் வெடித்து வருகிறது. இந்த நிலையில், தற்போது கவுதம்மேனன் இயக்கும் ‛வெந்து தணிந்தது காடு' படத்தில் நடிக்கிறார் சிம்பு. இந்த படம் தொடங்கப்பட்டதில் இருந்தே பெப்ஸிக்கும், தயாரிப்பாளர் சங்கத்துக்குமிடையே பிரச்னை வெடித்துள்ளது.
இந்தநேரத்தில் சிம்புவின் தாயாரான உஷா ராஜேந்தர், தனது மகன் சிம்புவுக்கு தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் இன்னும் ரூ.3.50 கோடி சம்பள பாக்கி தர வேண்டியுள்ளதாக ஒரு வீடியோவில் தெரிவித்திருந்தார். இதையடுத்து தற்போது அதற்கு மறுப்பு தெரிவித்து மைக்கேல் ராயப்பன், ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில், ரூ.3.50 கோடி சம்பளம் தர வேண்டும் என்று உஷா ராஜேந்தர் சொல்வது அப்பட்டமான பொய் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், சிம்பு எனக்கு இன்னொரு படத்தில் நடித்து தரவேண்டுமென்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட சொன்னேன். அதற்காகத்தான் நான் ரூ.75 லட்சம் தருவதாக கூறியிருந்தேன். ஆனால் இப்போதுவரை சிம்பு அந்த ஒப்பந்ததை என்னிடம் தரவில்லை. மேலும் நான் அவர்களுக்கு கொடுத்த ஒரு செக் பவுன்ஸ் ஆகிவிட்டது. அதற்கு அடுத்த நாள் அதே தொகைக்கான டிடி எடுத்து அவர்களுக்கு கொடுத்து விட்டேன். ஆனால் இப்போதுவரை அந்த செக்கை அவர்கள் என்னிடம் திருப்பித்தரவில்லை என்றும் சிம்பு மீதான தனது குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்.