சூப்பர் மாரி சூப்பர் : ‛பைசன்' படத்திற்கு ரஜினி பாராட்டு | 'பரிசு' திரைப்படம் கல்லூரி மாணவிகளுக்காக சிறப்பு திரையீடு! | ஒரு ‛என்' சேர்த்தால், வாழ்க்கை மாறிடுமா? : ஹன்சிகாவின் ஆசை | தெலுங்கில் 100 கோடி வசூலித்த 'காந்தாரா சாப்டர் 1' | 'கப்ஜா' படத்தால் 'இன்ஸ்பயர்' ஆன 'ஓஜி' : இயக்குனர் கருத்தால் சர்ச்சை | விஜய்யின் 'முரசு' படம் நின்று போக இப்படி ஒரு காரணமா ? 20 வருடம் கழித்து வெளியான தகவல் | முதன்முதலாக குழந்தையை அறிமுகப்படுத்திய தீபிகா, ரன்வீர் சிங் | திலீப்பின் கல்யாணராமன் படத்தை 23 வருடங்களுக்குப் பிறகு ரீ ரிலீஸ் செய்யும் நடிகர் லால் | தமிழ் இயக்குனர்களின் சாதியப் படங்கள் : துருவ் விக்ரம் விளக்கம் | காந்தாரா வராஹரூபம் பாடலுக்கு நடனம் ஆடிய பார்வதி ஜெயராம் |

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு புதிய படத்தில் இணைந்துள்ளது அனைவரும் அறிந்ததே. அது வடசென்னை படத்தின் தொடர்ச்சி என பலரும் கூறிவந்த நிலையில், இத்திரைப்படம் வட சென்னையில் நடைபெறும் கதைகளத்தை மையப்படுத்தி உருவானாலும், ‛வட சென்னை 2' இல்லை என வெற்றிமாறன் கூறியுள்ளார். சிம்புவின் 49வது படமாக உருவாகும் இப்படத்தை தாணு தயாரிக்கிறார்.
சமீபத்தில் இந்த படத்தின் புரோமோ ஷூட் நடைபெற்றது. இந்த நிலையில் இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை புரோமோ உடன் அறிவித்துள்ளார் தயாரிப்பாளர் தாணு. ‛வட சென்னை' படத்தை போன்று அதே காலகட்டத்தில் நடக்கும் மற்றொரு கதையாக இது உருவாகியுள்ளது, புரோமோவில் தெரிகிறது. கையில் கத்தியுடன் சிம்பு நடந்து செல்லும் காட்சிகளுடன் கூடிய புரோமோவில் படத்திற்கான அப்டேட் விரைவில் என அறிவித்துள்ளனர்.
'வடசென்னை' படத்தில் முதலில் சிம்பு தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போய்விட்டது. இதனையடுத்து அவருக்கு பதிலாக தனுஷ் நடித்தார். இந்நிலையில் தற்போது வடசென்னை பின்னணியிலான மற்றொரு கதையில் சிம்பு - வெற்றிமாறன் இணைந்திருப்பது படம் பற்றிய எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.




