'3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? | ஒரே படத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் | துல்கர் இருப்பதால் நான் தனிமையை உணரவில்லை: கல்யாணி |
தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி கதாநாயகிகளாக இருந்து இப்போதும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருப்பவர்கள் ராதிகா, ஊர்வசி, குஷ்பு. இவர்களில் ராதிகா, ஊர்வசி தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். குஷ்பு மட்டும் ஒரு இடைவெளிக்குப் பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் 'அண்ணாத்த' படத்தில் ரீ-என்ட்ரி ஆகிறார்.
இவர்கள் மூவரும் இணைந்து அடுத்து சர்வானந்த், ராஷ்மிகா நடிக்கும் தெலுங்குப் படமான 'ஆடவால்லு மீக்கு ஜோஹார்லு' என்ற படத்தில் நடிக்க உள்ளார்கள். இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை படத் தயாரிப்பு நிறுவனமான எஸ்எல்வி சினிமாஸ் வெளியிட்டுள்ளது.
தமிழில் இவர்கள் மூவரும் இதற்கு முன்பு இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இயக்கத்தில் 'ஓ அந்த நாட்கள்' படத்தில் இணைந்து நடித்துள்ளார்கள். அப்படத்தில் சுஹாசினி, சுலக்ஷனா ஆகியோரும் நடித்துள்ளார்கள். ஆனால், அப்படம் இன்னும் வெளியாகவில்லை.
'ஆடவால்லு மீக்கு ஜோஹார்லு' படத்தை கிஷோர் திருமலா இயக்க தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். கடந்த ஏப்ரல் மாதம் ராஷ்மிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான போஸ்டருக்கே ரசிகர்கள் மயங்கிப் போய் உள்ளார்கள். கொரானோவால் தாமதமான படப்பிடிப்பு மீண்டும் விறுவிறுப்பாக நடைபெற உள்ளதாம்.