பராசக்தி முதல் பாடலான 'அடி அலையே' வெளியீடு | தயாரிப்பாளர்களுக்கு கூட பாடல் உரிமையை வழங்கியது இல்லை: இளையராஜா | 'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு : நவ., 8ல் முதல் பாடல் | சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு | கிஸ் முதல் நெட்வொர்க் வரை... இந்த வாரா ஓடிடி ரிலீஸ்...! | ''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான் | ரோஜா 'கம்பேக்': 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிக்கிறார் | மணிரத்னம் படம் : சிம்புவிற்கு பதில் விஜய் சேதுபதி | ரஜினிகாந்த்தை 'தலைவர்' எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன் | ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் இரண்டு படங்கள் |

ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் சிக்கி உள்ளனர். பலர் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதனை கட்டுப்படுத்துவதின் ஒரு பகுதியாக ஆன்லைன் சூதாட்ட செயலிகளை (ஆப்) அரசு தடை செய்தது.
இந்த செயலிகளை விளம்பரப்படுத்திய நடிகர், நடிகையும் விசாரித்து வருகிறார்கள். சூதாட்ட பணத்தில் அவர்கள் சம்பளம் பெற்றிருந்தால் அதுவும் குற்றமாகும் என்கிற அடிப்படையில் அவர்களும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்படுகிறார்கள்.
அந்த வகையில் சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்த பாலிவுட் நடிகை ஊர்வசி ரத்தேலா, மேற்கு வங்க நடிகை மிமி சக்ரவர்த்தி ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. டில்லியில் உள்ள அமலாக்கத்துறையின் தலைமை அலுவலகத்தில் இன்று (செப்.15) விசாரணைக்கு ஆஜராவார்கள் என்று தெரிகிறது.
பாலிவுட் நடிகையான ஊர்வசி ரத்தேலா தமிழில் சரவணன் நடித்த 'லெஜண்ட்' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.