டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

'த பேமிலி மேன் 2' என்ற சர்ச்சைத் தொடரை இயக்கிய தெலுங்கு இயக்குனர்களான ராஜ் மற்றும் டிகே அடுத்து இயக்கும் வெப் தொடரில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அத்தொடரில் ஹிந்தி நடிகரான ஷாகித் கபூர், ராஷி கண்ணா ஆகியோரும் நடிக்கிறார்கள்.
'த பேமிலி மேன் 2' தொடரையும், அப்படத்தில் இலங்கைப் பிரச்சினை பற்றி தவறான சில கருத்துக்களை முன் வைத்த ராஜ், டிகே படங்களையும் புறக்கணிக்க வேண்டுமென தமிழ் சினிமா உலகில் சிலரும், சில அரசியல் கட்சித் தலைவர்களும் வேண்டுகோள் விடுத்தனர்.
ஆனால், அவற்றையெல்லாம் கண்டு கொள்ளாமல் விஜய் சேதுபதி, ராஜ் மற்றும் டிகே இயக்கும் வெப் தொடரின் படப்பிடிப்பில் நேற்று முதல் நடித்து வருகிறார். அடுத்து அவர்கள் தயாரிக்க உள்ள ஒரு பான்-இந்தியா படத்தில் விஜய்சேதுபதி நடிக்க உள்ளாராம்.
தெலுங்கு நடிகரான சந்தீப் கிஷன், விஜய் சேதுபதி இருவரும் அப்படத்தில் நடிக்கப் போகிறார்களாம். சுந்தீப் கிஷன் தனது டுவிட்டரில், “பெரிய அண்ணன் மீதான அன்பு. ஒன் அன்ட் ஒன் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, விரைவில்,” என பதிவிட்டுள்ளார்.
சர்ச்சை இயக்குனர்களின் இயக்கத்தில் வெப் தொடர், தயாரிப்பில் ஒரு படம் என விஜய் சேதுபதி நடிப்பது தமிழ் சினிமாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




