''தமிழன் பிரதமராக முடியுமா? அதற்கு தயாராக இருக்கணும்'': கமல்ஹாசன் பேச்சு | ''சகுனிகள் நிறைந்த உலகம்; நல்லவனா இருந்தா பிழைக்க முடியாது'' - ரஜினி பேச்சு | பிளாஷ்பேக் : ராஜா என்னை மன்னித்துவிடு... கைவிடப்பட்ட கமல் - ருத்ரைய்யா படம் | பிளாஷ்பேக் : ஒரே வருடத்தில் 9 படங்களில் நடித்த சிவாஜி | இடைவெளிக்குப் பின் படப்பிடிப்பில் அனுஷ்கா | நாகேஸ்வரராவ் நூற்றாண்டு விழாவில் சிரஞ்சீவிக்கு விருது: அமிதாப் வழங்குகிறார் | வேதிகா உழைப்பாளி, சன்னி லியோன் மனிதநேயர் : பிரபுதேவா புகழாரம் | 16 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் மம்முட்டி, மோகன்லால் | பழம்பெரும் மலையாள நடிகை கவியூர் பொன்னம்மா காலமானார் | என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்க... அந்த பெண்ண பேசாதீங்க : ஜெயம் ரவி பேட்டி |
'த பேமிலி மேன் 2' என்ற சர்ச்சைத் தொடரை இயக்கிய தெலுங்கு இயக்குனர்களான ராஜ் மற்றும் டிகே அடுத்து இயக்கும் வெப் தொடரில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அத்தொடரில் ஹிந்தி நடிகரான ஷாகித் கபூர், ராஷி கண்ணா ஆகியோரும் நடிக்கிறார்கள்.
'த பேமிலி மேன் 2' தொடரையும், அப்படத்தில் இலங்கைப் பிரச்சினை பற்றி தவறான சில கருத்துக்களை முன் வைத்த ராஜ், டிகே படங்களையும் புறக்கணிக்க வேண்டுமென தமிழ் சினிமா உலகில் சிலரும், சில அரசியல் கட்சித் தலைவர்களும் வேண்டுகோள் விடுத்தனர்.
ஆனால், அவற்றையெல்லாம் கண்டு கொள்ளாமல் விஜய் சேதுபதி, ராஜ் மற்றும் டிகே இயக்கும் வெப் தொடரின் படப்பிடிப்பில் நேற்று முதல் நடித்து வருகிறார். அடுத்து அவர்கள் தயாரிக்க உள்ள ஒரு பான்-இந்தியா படத்தில் விஜய்சேதுபதி நடிக்க உள்ளாராம்.
தெலுங்கு நடிகரான சந்தீப் கிஷன், விஜய் சேதுபதி இருவரும் அப்படத்தில் நடிக்கப் போகிறார்களாம். சுந்தீப் கிஷன் தனது டுவிட்டரில், “பெரிய அண்ணன் மீதான அன்பு. ஒன் அன்ட் ஒன் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, விரைவில்,” என பதிவிட்டுள்ளார்.
சர்ச்சை இயக்குனர்களின் இயக்கத்தில் வெப் தொடர், தயாரிப்பில் ஒரு படம் என விஜய் சேதுபதி நடிப்பது தமிழ் சினிமாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.