நடிகை ராதிகாவுக்கு டெங்கு : மருத்துவமனையில் அனுமதி | மோசடி வழக்கு : காமெடி நடிகர் சீனிவாசன் கைது | பிரபாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் | சோசியல் மீடியாவில் 7 ஆண்டுகளாக அவதூறு பரப்பிய பெண்ணை அடையாளப்படுத்திய பிரித்விராஜ் மனைவி | அசினுடன் நடந்த டெஸ்ட் ஷூட் : பஹத் பாசிலுக்கு கைமாறிய பிரித்விராஜ் படம் | நடிகர் சங்கத்திற்கு பெண் தலைமை : மோகன்லால் ஆலோசனைப்படி வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நடிகர் | ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு |
'த பேமிலி மேன் 2' என்ற சர்ச்சைத் தொடரை இயக்கிய தெலுங்கு இயக்குனர்களான ராஜ் மற்றும் டிகே அடுத்து இயக்கும் வெப் தொடரில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அத்தொடரில் ஹிந்தி நடிகரான ஷாகித் கபூர், ராஷி கண்ணா ஆகியோரும் நடிக்கிறார்கள்.
'த பேமிலி மேன் 2' தொடரையும், அப்படத்தில் இலங்கைப் பிரச்சினை பற்றி தவறான சில கருத்துக்களை முன் வைத்த ராஜ், டிகே படங்களையும் புறக்கணிக்க வேண்டுமென தமிழ் சினிமா உலகில் சிலரும், சில அரசியல் கட்சித் தலைவர்களும் வேண்டுகோள் விடுத்தனர்.
ஆனால், அவற்றையெல்லாம் கண்டு கொள்ளாமல் விஜய் சேதுபதி, ராஜ் மற்றும் டிகே இயக்கும் வெப் தொடரின் படப்பிடிப்பில் நேற்று முதல் நடித்து வருகிறார். அடுத்து அவர்கள் தயாரிக்க உள்ள ஒரு பான்-இந்தியா படத்தில் விஜய்சேதுபதி நடிக்க உள்ளாராம்.
தெலுங்கு நடிகரான சந்தீப் கிஷன், விஜய் சேதுபதி இருவரும் அப்படத்தில் நடிக்கப் போகிறார்களாம். சுந்தீப் கிஷன் தனது டுவிட்டரில், “பெரிய அண்ணன் மீதான அன்பு. ஒன் அன்ட் ஒன் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, விரைவில்,” என பதிவிட்டுள்ளார்.
சர்ச்சை இயக்குனர்களின் இயக்கத்தில் வெப் தொடர், தயாரிப்பில் ஒரு படம் என விஜய் சேதுபதி நடிப்பது தமிழ் சினிமாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.