3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி | 'கஜினி'யும், 'துப்பாக்கி'யும் கலந்தது 'மதராஸி' : ஏ.ஆர்.முருகதாஸ் | தயாரிப்பாளர் சங்கத் தலைரை கைது செய்து ஆஜர்படுத்த கோர்ட் உத்தரவு | பழம்பெரும் நடன இயக்குனர் ஓமணா காலமானர் | பிளாஷ்பேக்: கடும் விமர்சனத்தை சந்தித்த 'கன்னி ராசி' கிளைமாக்ஸ் |
தனுஷை நடிகராக உருவாக்கிய அவரது அண்ணனான டைரக்டர் செல்வராகவன், தொடர்ந்து இயக்குனராகவே வலம் வந்தார். தற்போது சாணிக்காயிதம் என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். அருண் மாதேஸ்வரன் என்பவர் இயக்கும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்து வருகிறார்.
இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியானதை அடுத்து, சாணிக்காயிதம் படத்தில் தான் நடித்த சில போட்டோக்களை வெளியிட்டிருந்தார் கீர்த்தி சுரேஷ். இந்நிலையில் தற்போது செல்வராகவன் மிரட்டலாக அமர்ந்திருக்கும் ஒரு அதிரடியான போட்டோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த போட் டோவில் ஒரு முழுமையான நடிகராக செல்வராகவன் தன்னை வெளிப்படுத்தியிருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் கொடுத்து வருகின்றனர்.
மேலும், இந்த சாணிக்காயிதம் படத்தில் நடித்து முடித்ததும் அடுத்தபடியாக தனுஷ் நடிக்கும் நானே வருவேன் படத்தை ஆகஸ்டு 20-ந்தேதியில் இருந்து செல்வராகவன் தொடங்கயிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.