வேதிகா உழைப்பாளி, சன்னி லியோன் மனிதநேயர் : பிரபுதேவா புகழாரம் | 16 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் மம்முட்டி, மோகன்லால் | பழம்பெரும் மலையாள நடிகை கவியூர் பொன்னம்மா காலமானார் | என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்க... அந்த பெண்ண பேசாதீங்க : ஜெயம் ரவி பேட்டி | என் கவுன்டர் என்பது ஹீரோயிசமா... இல்ல குற்றத்தை தடுக்கும் நடவடிக்கையா... : ‛வேட்டையன்' பிரிவியூ வெளியானது | இயக்குனர் கே.பாலசந்தர் பற்றி அவதூறு : பாடகி சுசித்ராவுக்கு எழுத்தாளர் சங்கம் கண்டனம் | குற்றத்தை நிரூபித்தால் கணவரை பிரிய தயார்: அடுக்கடுக்கான கேள்விகளுடன் ஜானி மாஸ்டர் மனைவி சவால் | மொழி இல்லம் : புது வீடு கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில் மிருணாளினி ரவி | நான் ரொம்ப சின்ன பொண்ணுங்க : பவி டீச்சர் பிரிகிடா விளக்கம் | எல்.சி.யு.வில் இணையும் ராகவா லாரன்ஸ் |
தனுஷை நடிகராக உருவாக்கிய அவரது அண்ணனான டைரக்டர் செல்வராகவன், தொடர்ந்து இயக்குனராகவே வலம் வந்தார். தற்போது சாணிக்காயிதம் என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். அருண் மாதேஸ்வரன் என்பவர் இயக்கும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்து வருகிறார்.
இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியானதை அடுத்து, சாணிக்காயிதம் படத்தில் தான் நடித்த சில போட்டோக்களை வெளியிட்டிருந்தார் கீர்த்தி சுரேஷ். இந்நிலையில் தற்போது செல்வராகவன் மிரட்டலாக அமர்ந்திருக்கும் ஒரு அதிரடியான போட்டோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த போட் டோவில் ஒரு முழுமையான நடிகராக செல்வராகவன் தன்னை வெளிப்படுத்தியிருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் கொடுத்து வருகின்றனர்.
மேலும், இந்த சாணிக்காயிதம் படத்தில் நடித்து முடித்ததும் அடுத்தபடியாக தனுஷ் நடிக்கும் நானே வருவேன் படத்தை ஆகஸ்டு 20-ந்தேதியில் இருந்து செல்வராகவன் தொடங்கயிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.