படுகவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட ஜெனிபர் | ஜுனியர் என்டிஆருக்கு வாழ்த்து சொன்ன பவன் கல்யாண் | தெலுங்கு பட ஷூட்டிங்கில் ரச்சிதா மகாலெட்சுமி | 'சத்யா' காட்சியைப் பகிர்ந்து கவியூர் பொன்னம்மாவுக்கு கமல்ஹாசன் இரங்கல் | சுதா சந்திரன் பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் குழுவினர் | சீக்கிரமே அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிடுவேன் - ராஜலெட்சுமி பேட்டி | 160 படங்களைக் கடந்த 2024 ரிலீஸ், 6 படங்கள் மட்டுமே 100 கோடி வசூல் | வித்தியாசமா கூவுறாங்க! மணிமேகலை வெளியிட்ட நறுக் வீடியோ | சீரியலிலும் அட்ஜெஸ்ட்மென்ட் இருக்கு - நிமிஷிகா பளீச் பேட்டி | சிம்பு நடிக்க இருந்த படத்தில் ரஜினியா? |
கொரோனா தாக்கி உயிரிழந்தவர்களில் 75 சதவிகிதம் பேர் புகைபிடிக்கும் வழக்கத்தை கொண்டிருந்தவர்கள் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இதனால், புகைப்பிடிப்பதற்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன். மேலும் தனது ரசிகர்கள் புகைப் பிடிக்கக் கூடாது எனவும் வேண்டுகோள் வைத்துள்ளார்.
இது தொடர்பாக அல்லு அர்ஜுன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புகைப் பிடிப்பதின் தீமைகளைக் குறித்து கவனத்தை ஈர்க்க விரும்பினேன். 90களின் காலகட்டத்தில் மேற்கத்தியக் கலாச்சாரத்தால் நாம் ஈர்க்கப்பட்டபோது தான் புகைப்பிடிக்கும் பழக்கம் அதிகமானது. அந்தக் காலத்தில் அது ஒரு பெருமைக்குரிய விஷயமாகக் கருதப்பட்டது.
தற்பொழுது 2021ல் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு மத்தியிலும் புகைப் பிடிக்கும் பழக்கம் உச்சத்தில் உள்ளது. இதற்கு மன அழுத்தமும் ஒரு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. இதை மாற்ற என்னால முடிந்த ஒரு சிறு முயற்சியை மேற்கொண்டுள்ளேன். கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் குறையாமல் இருப்பதாலும், மேலும் மூன்றாம் அலைக்கான சாத்தியக்கூறு அதிகமாக இருப்பதாகக் கூறப்படுவதாலும் ஆரோக்கியமான வாழ்க்கையின் முக்கியத்துவத்தை வலியுறுத்த விரும்பினேன்.
எனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்குப் புகைப் பிடிப்பதால் ஏற்படும் தீமைகளைக் குறித்து நான் எடுத்துரைத்து வருகிறேன். சிறிய அளவில் நாம் செய்யும் மாற்றம் கூட நம்மைச் சீரான மற்றும் ஆரோக்கியமான பாதைக்கு அழைத்துச் செல்லும் நான் நம்புகிறேன்.
இவ்வாறு அல்லு அர்ஜுன் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
உங்க அட்வைஸ் இருக்கட்டும் பாஸ், உங்கள் படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று நீங்க உறுதி எடுங்க பாஸ் என்று நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகிறார்கள்.