கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி |
2019ம் ஆண்டு சாருஹாசன், ஜனகராஜ், பாலா சிங், மாரிமுத்து ஆகியோர் நடிப்பில் வெளியான படம் தாதா 87. இந்தப் படத்தை விஜய் ஸ்ரீ தயாரித்து, இயக்கியிருந்தார். சாய்குமார் நடிப்பில் தெலுங்கில் உருவாகி வரும் ஒன் பை டூ தனது படத்தின் அதிகாரபூர்வமற்ற ரீமேக் என்று குற்றம் சாட்டி உள்ளார் இயக்குனர் விஜய் ஸ்ரீ. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசனை வைத்து நான் எழுதி இயக்கி ஜி மீடியா கலை சினிமாவுடன் இணைந்து தயாரித்த படம் தாதா 87. தற்சமயம் பவுடர் ,பப்ஜி படங்களை இயக்கி வருகிறேன். சாய்குமார் நடிப்பில் ஒன் பை டூ என்ற பெயரில் தெலுங்கில் ஒரு படம் தயாராகி வருகிறது. இது தாதா 87 படத்தின் ரீமேக் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.
ஒன் பை டூ படக்குழு என்னுடைய கற்பனையும் என் உழைப்பையும் என்னிடம் முறையாக எந்தவிதமான அனுமதியும் பெறாமல் பயன்படுத்தி இருப்பதும், சாய்குமார் போன்ற மிகப்பெரிய நடிகர் துணையுடன் நடந்து இருப்பதும் வருந்தத்தக்கது. சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளோம். என்று குறிப்பிட்டுள்ளார்.