இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கி வந்த இந்தியன் 2 படம் 50 சதவிகித படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், கமலுக்கு மேக்கப் அலர்ஜி, படப்பிடிப்பு தளத்தில் விபத்து, கொரோனா ஊரடங்கு போன்ற காரணங்கள் படப்பிடிப்பு தாமதமாகி வந்தது. அதையடுத்து ஒரு வருடமாக பைனான்ஸ் பிரச்சினை காரணமாக படப்பிடிப்பை நிறுத்தி வைத்திருந்தது லைகா நிறுவனம்.
இதனால் கமல்ஹாசன் விக்ரம் என்ற படத்தில் நடிக்க தொடங்க, ஷங்கரோ தெலுங்கு, ஹிந்தியில் புதிய படங்களை இயக்கும் ஆரம்பகட்ட பணிகளை தொடங்கினார். இதனால் இந்தியன்-2வை முடிக்காமல் அவர் வேறு படத்தை இயக்க செல்லக்கூடாது என்று நீதிமன்றத்தை நாடி தடை போட்டது லைகா நிறுவனம்.
அதையடுத்து, லைகா நிறுவனமும், டைரக்டர் ஷங்கரும் இந்த பிரச்சினை பேசி சுமூக முடிவுக்கு வருமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியபோதும் அதில் உடன்பாடு ஏற்படவில்லை. அதன்காரணமாக, இன்று இந்தியன்-2 வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதோடு, இருதரப்பினருக்குமிடையே பேசி தீர்த்து தீர்வு காண வேண்டும் என்பதற்காக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.பானுமதியை நீதிபதி சதீஷ்குமார் நியமித்துள்ளார். இவர் லைகா நிறுவனம்-டைரக்டர் ஷங்கருக்கிடையே மத்தியஸ்தம் பேசி அதுகுறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பின்னர், இந்தியன்-2 விவகாரம் குறித்த இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என்று உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.