மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
நடிகர் சசிகுமாரின் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்த அவரது இணை தயாரிப்பாளர் அசோக்குமார் என்பவர் கடன் பிரச்சினையால் ஏற்பட்ட தொல்லை காரணமாக 2017ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் சினிமா வட்டாரங்களில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து சினிமா பைனான்சியர் போத்ரா, தன்னிடம் கடன் வாங்குபவர்களிடம் கடுமையாக நடந்து கொள்கிறார் என்று பத்திரிக்கை ஒன்றில் பேட்டி அளித்திருந்தார் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா. இதையடுத்து அவர் மீது சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார் பைனான்சியர் போத்ரா.
இந்நிலையில் போத்ரா இறந்து விட்ட நிலையில் இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கினை விசாரித்த நீதிபதி தண்டபாணி, ஞானவேல்ராஜா மீதான குற்றச்சாட்டுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்று சொல்லி அவர் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.