வசூல் கொட்டுது... : 10 நாளில் ரூ.552.70 கோடியை குவித்த ‛துரந்தர்' | ஹனி ரோஸின் ‛ரேச்சல்' படம் ரிலீஸ் ஒத்திவைப்பு | அரசு பேருந்தில் திரையிடப்பட்ட திலீப் திரைப்படம் ; பெண் பயணியின் எதிர்ப்பால் நிறுத்தம் | புத்தாண்டு தினத்தில் அஜித் 64வது பட அறிவிப்பு வெளியாகிறதா? | நான் அழுதால் நீங்கள் சிரிப்பீர்கள் ; சல்மான்கான் வெளிப்படை பேச்சு | கருப்பு படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் சேனல் | மதுப்பழக்கம் துவங்கியது புகுந்த வீட்டில் தான்; நடிகை ஊர்வசி | எம்ஜிஆர் நினைவுநாளில் 'வா வாத்தியார்' வருகிறார்…??? | தயாரிப்பாளர்கள் இல்லாமல் நடந்த 'அகண்டா 2' சக்சஸ் மீட் | பலாத்காரத்துக்கு திட்டமிட்டவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் : மஞ்சு வாரியர் |

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். தற்போது தமிழ், தெலுங்கில் உருவாகி வரும் இருமொழி படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீது ரூ.4 கோடி பணம் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார் சிவகார்த்திகேயன். அதில் மிஸ்டர் லோக்கல் படத்தில் தனக்கு 15 கோடி சம்பளம் பேசப்பட்டதாகவும், ரூ.11 கோடி மட்டுமே சம்பளம் தந்ததாகவும், மீதி ரூ.4 கோடியை தரவில்லை. தனக்கு தர வேண்டிய சம்பள பாக்கியை செலுத்தும் வரை ஞானவேல் ராஜா தயாரிக்கும் படங்களில் அவர் முதலீடு செய்ய தடை விதிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் ஞானவேல் ராஜா பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ‛‛மிஸ்டர் லோக்கல் படத்தால் எனக்கு ரூ.20 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அந்த கதையை எனக்கு பிடிக்கவில்லை. இருந்தாலும் சிவகார்த்திகேயனின் கட்டாயத்தால் அந்த படத்தை தயாரித்தேன். உண்மை நிலவரம் இப்படியிருக்க, படம் வெளியாகி இத்தனை ஆண்டுகளுக்கு பின் இப்போது வழக்கு தொடருவது ஏன் என கேட்டுள்ளார். மேலும் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும். சிவகார்த்திகேயனுக்கு அபராதம் விதிக்க வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.




