கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | மணிகண்டனை இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா | கருப்பு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முயற்சி பண்றோம் : ஆர்.ஜே. பாலாஜி | பிரசாந்த் படத்தில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள் | திருமணம் செய்யாமலேயே கர்ப்பம் ஆன பாவனா | சென்னை குற்ற சம்பவ பின்னணியில் உருவான 'சென்னை பைல்ஸ்' |
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் 'மிஸ்டர் லோக்கல்'. இந்த படத்தை ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படத்திற்காக சிவகார்த்திகேயனுக்கு 15 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்ட நிலையில் இதுவரை 11 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 4 கோடி ரூபாய் இதுவரை கொடுக்கப்படவில்லை.
இதைதொடர்ந்து தனது சம்பள பாக்கி 4 கோடியை தனக்கு தரக்கோரி சிவகார்த்திகேயன் தரப்பில் ஞானவேல் ராஜா மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீண்ட நாட்களாக சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு நேற்று நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது இரு தரப்பும் சமரசம் செய்துக் கொள்வதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது. இதற்கிடையே சிவகார்த்திகேயனுக்கு கொடுக்க வேண்டிய சம்பளம் பாக்கியை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கொடுத்துவிட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.