டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

இயக்குனர் வெற்றிமாறன் இப்போது நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் உருவாகியுள்ள 'விடுதலை' படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் வரும் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் ரிலீஸாக உள்ளது. அதன்பின் சூர்யாவின் வாடிவாசல், தனுஷின் வட சென்னை 2 ஆகிய படங்கள் லைனில் உள்ளன.
இந்நிலையில் வெற்றிமாறன் தன் உதவி இயக்குனர்கள் 25 நபர்களுக்கு செங்கல்பட்டு மாவட்டம் உத்திரமேரூர் அருகே ஆளுக்கு ஒரு கிரவுண்ட் நிலம் வாங்கி கொடுத்துள்ளாராம். இந்த இடத்தில் வீடு கட்டிக் கொள்ளவோ, அல்லது சிறு அளவில் விவசாயமோ செய்ய சொல்லி உள்ளாராம். அதேசமயம் எக்காரணத்தை கொண்டும் அந்த இடத்தை விற்க கூடாது என கண்டிப்பான முறையில் கூறி உள்ளார் வெற்றிமாறன்.
இது குறித்து செய்திகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. நெட்டிசன்கள் வெற்றிமாறனை பாராட்டி வருகின்றனர்.




