பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
ராஜமவுலி இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ராம் சரண் தேஜா, ஆலியா பட் மற்றும் பலர் நடிக்கும் படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கொரோனா தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்னும் 50 நாட்கள் வரை படப்பிடிப்பு நடத்தினால் மொத்த படப்பிடிப்பும் முடிவடையும் நிலையில் உள்ளது என டோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.
இதனிடையே, இப்படத்தின் வெளியீட்டிற்குப் பிந்தைய சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமை ஆகியவை சாதனை விலைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக பாலிவுட்டிலிருந்து வரும் தகவல்கள தெரிவிக்கின்றன. அனைத்து மொழிகளுக்குமான அந்த உரிமையை ஜீ நிறுவனம் சுமார் 325 கோடி ரூபாய்க்கு வாங்கிவிட்டதாகச் சொல்கிறார்கள். கடந்த வருடம் ஸ்டார் இந்தியா நிறுவனத்திடம் பேச்சு வார்த்தை நடந்ததாம். ஆனால், அவர்களுடனான பேச்சு வார்த்தை ஒப்பந்தம் வரை போகவில்லை என்கிறார்கள்.
இந்த சாட்டிலைட், டிஜிட்டல் உரிமை விற்பனையுடன் சேர்த்து அனைத்து விதமான வியாபாரத்தையும் 'ஆர்ஆர்ஆர்' குழுவினர் முடித்துவிட்டார்களாம். டேபிள் பிராபிட்டாக மட்டும் சுமார் 400 கோடிக்கும் அதிகமாக வந்திருக்கும் என்கிறார்கள். ஒட்டு மொத்த வியாபாரமும் 800 கோடி ரூபாயைக் கடந்திருக்கலாம் என்றும் தகவல்.
இந்தியத் திரையுலகில் இதுவரையில் எந்த ஒரு படமும் வெளியீட்டிற்கு முன்பே இந்த அளவிற்கு ஒரு வியாபாரத்தைப் பண்ணதில்லை என்றே பாலிவுட்டில் சொல்கிறார்கள்.
ராஜமவுலி இந்தியத் திரையுலகின் முதன்மை இயக்குனராக இப்படம் மூலம் உயர்ந்துவிடுவார் என்பதால் தெலுங்குத் திரையுலகினர் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.