மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
தமிழ், தெலுங்கில் பல படங்களில் நடித்திருந்தபோதும், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ்-4 நிகழ்ச்சி மூலம் பெரிய அளவில் பிரபலமானவர் சனம் ஷெட்டி. இவர் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து வெளியேறியவர்களை டுவிட்டர் வாயிலாக விமர்சித்துள்ளார்.
அதில், ‛‛மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட்டபோது எதற்காக கட்சியில் சேர்ந்தீர்கள் என மக்களிடத்தில் பேசினீர்கள். ஆனால் இப்போது கட்சியில் இருந்து வெளியேறும்போது எதுவும் சொல்லாமல் தனிப்பட்ட காரணம் என்று சொல்லி வெளியேறியது ஏன்? வெற்றி பெற்றிருந்தால் நீங்கள் விலகியிருப்பீர்களா? என்று கமல் கட்சியில் இருந்து வெளியேறிய மகேந்திரன், சந்தோஷ்பாபு, பத்மப்பிரியா ஆகியோரைப் பார்த்து கேள்வி எழுப்பியுள்ளார் சனம்.
அதோடு, கமல்ஹாசன் அதிகாரத்திற்கு வர வேண்டிய அவசியமில்லை. அவரது தொலைநோக்கு பார்வை ஒன்றே போதும் என்றும் அவரை பாராட்டியுள்ளார் சனம் ஷெட்டி.