ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
தமிழ், தெலுங்கில் பல படங்களில் நடித்திருந்தபோதும், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ்-4 நிகழ்ச்சி மூலம் பெரிய அளவில் பிரபலமானவர் சனம் ஷெட்டி. இவர் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து வெளியேறியவர்களை டுவிட்டர் வாயிலாக விமர்சித்துள்ளார்.
அதில், ‛‛மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட்டபோது எதற்காக கட்சியில் சேர்ந்தீர்கள் என மக்களிடத்தில் பேசினீர்கள். ஆனால் இப்போது கட்சியில் இருந்து வெளியேறும்போது எதுவும் சொல்லாமல் தனிப்பட்ட காரணம் என்று சொல்லி வெளியேறியது ஏன்? வெற்றி பெற்றிருந்தால் நீங்கள் விலகியிருப்பீர்களா? என்று கமல் கட்சியில் இருந்து வெளியேறிய மகேந்திரன், சந்தோஷ்பாபு, பத்மப்பிரியா ஆகியோரைப் பார்த்து கேள்வி எழுப்பியுள்ளார் சனம்.
அதோடு, கமல்ஹாசன் அதிகாரத்திற்கு வர வேண்டிய அவசியமில்லை. அவரது தொலைநோக்கு பார்வை ஒன்றே போதும் என்றும் அவரை பாராட்டியுள்ளார் சனம் ஷெட்டி.