டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

தமிழ், தெலுங்கில் பல படங்களில் நடித்திருந்தபோதும், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ்-4 நிகழ்ச்சி மூலம் பெரிய அளவில் பிரபலமானவர் சனம் ஷெட்டி. இவர் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து வெளியேறியவர்களை டுவிட்டர் வாயிலாக விமர்சித்துள்ளார்.
அதில், ‛‛மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட்டபோது எதற்காக கட்சியில் சேர்ந்தீர்கள் என மக்களிடத்தில் பேசினீர்கள். ஆனால் இப்போது கட்சியில் இருந்து வெளியேறும்போது எதுவும் சொல்லாமல் தனிப்பட்ட காரணம் என்று சொல்லி வெளியேறியது ஏன்? வெற்றி பெற்றிருந்தால் நீங்கள் விலகியிருப்பீர்களா? என்று கமல் கட்சியில் இருந்து வெளியேறிய மகேந்திரன், சந்தோஷ்பாபு, பத்மப்பிரியா ஆகியோரைப் பார்த்து கேள்வி எழுப்பியுள்ளார் சனம்.
அதோடு, கமல்ஹாசன் அதிகாரத்திற்கு வர வேண்டிய அவசியமில்லை. அவரது தொலைநோக்கு பார்வை ஒன்றே போதும் என்றும் அவரை பாராட்டியுள்ளார் சனம் ஷெட்டி.




