பிக்பாக்கெட் குற்றங்களை விரிவாக பேசும் படம் | தமிழில் வெளியாகும் ஹாலிவுட் அனிமேஷன் படம் | திருமண ஆசை காட்டி மோசடி : சின்னத்திரை நடிகை ரிகானா மீது போலீசில் புகார் | நடிகர் ஆர்யா உணவகங்களில் வருமான வரித்துறை சோதனை | சிரஞ்சீவி 157வது படப்பிடிப்பில் இணைந்த நயன்தாரா | கர்ப்பமாக இருக்கும் கியாரா அத்வானிக்காக டாக்ஸிக் படப்பிடிப்பை மும்பைக்கு மாற்றிய யஷ் | விடாமல் துரத்திய போட்டோகிராபர்கள் : கோபமான சமந்தா | காந்தாரா 2 படப்பிடிப்பில் படகு விபத்து நடந்ததா? : தயாரிப்பாளர் தரப்பு விளக்கம் | “மஞ்சுவாரியரை அறிமுகப்படுத்த அவரது தந்தை என்னிடம் வாய்ப்பு கேட்டார்” : நெகிழ்ந்த ஊர்வசி | ஆதங்கப்பட்ட அனுபமா பரமேஸ்வரன்... : சமாதானப்படுத்திய சுரேஷ் கோபி |
தமிழில் எஸ்ஜே சூர்யா இயக்கி, நாயகனாக நடித்த 'அன்பே ஆருயிரே' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நிலா என்கிற மீரா சோப்ரா. அதன்பின் 'மருதமலை, காளை, ஜகன்மோகினி' உள்ளிட்ட தமிழ்ப் படங்களிலும், தெலுங்கு, ஹிந்தி, கன்னடப் படங்களிலும் நடித்துள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக ஒரு வாரத்திற்குள் அவருடைய உறவினர்கள் இருவரை அடுத்தடுத்து இழந்துவிட்டார். “மற்றுமொரு கசின் இன்று இறந்துவிட்டார். கடந்த ஒரு வாரத்தில் எனது குடும்பத்தில் இரண்டு உறவினர்கள் இறந்துவிட்டார்கள். இப்படி பயனில்லாத, உதவ முடியாத நிலையை பார்ப்பேன் என நினைக்கவில்லை. மனமும், உடலும் மரத்து போவதால் கோபம் கூட மறைந்துவிடுகிறது. இன்னும் எவ்வளவைப் பார்க்க வேண்டும்,” என பத்து நாட்களுக்கு முன்பு டுவீட் செய்துள்ளார்.
அதிலிருந்து தொடர்ந்து கொரோனா தொற்றுக்கு உதவி செய்யும் விதத்தில் பல டுவீட்டுகளைப் பதிவிட்டு வருகிறார். நேற்று இன்னும் கோபமாக, “மருத்துவமனையில் பெட் கிடைக்காமலும், சுவாசிப்பதற்கு ஆக்சிஜன் கிடைக்காமலும், வாழ முடியாமல் இருக்க நான் எதற்காக 18 சதவீத ஜிஎஸ்டியைக் கட்ட வேண்டும், அதை நீக்குங்கள்,” எனப் பதிவிட்டு, பிரதமர், உள்துறை அமைச்சர், நிதியமைச்சர், பாஜக ஆகியோரை டேக் செய்துள்ளார்.