பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
சென்னை : ‛‛சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. கலைஞர்கள் நன்கொடை தருவதை காட்டிலும் வாழ்நாளில் 10 நாள் கால்ஷீட் தர வேண்டும்,'' என, பெப்சி தலைவர் செல்வமணி கூறியுள்ளார்.
தமிழக அரசுக்கும், திரைத்துறை கலைஞர்களுக்கும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் எனப்படும் பெப்சியின் கோரிக்கை குறித்து அதன் தலைவர் செல்வமணி பேட்டி:
கொரோனா பரவலால், படப்பிடிப்பில் பணிபுரியும் தொழிலாளர்களின் நிலைமை மிக மோசமாக உள்ளது. படப்பிடிப்புக்கு சென்ற உறுப்பினர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். அவரால் அவரது குடும்பத்தினர் பாதிக்கின்றனர். ஒரு உறுப்பினரின் பெற்றோர் கொரோனா பாதித்து இறந்து விட்டனர். கடந்த வாரம் சின்னத்திரை படப்பிடிப்பில் பரிசோதனை செய்ததில், 26 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
பாதித்தவர்களுக்கு உதவி கேட்டால், அடுத்த தயாரிப்பாளரை கைகாட்டி, தட்டிக் கழிக்கின்றனர். கடந்த வாரம் தமிழக முதல்வரை சந்தித்த போது, படப்பிடிப்புக்கு அனுமதி வேண்டுதல் உள்ளிட்ட 3 கோரிக்கைகளை வழங்கினோம். அதில், அனுமதி கோரிக்கையை வாபஸ் பெறுகிறோம். மே இறுதி வரை படப்பிடிப்புகள் மற்றும் பிந்தைய பணிகள் அனைத்திலும் ஈடுபடுவதில்லை என முடிவு எடுத்துள்ளோம்.
கடந்த முறை போலவே இம்முறையும் கொரோனா பரவல் மற்றும் பாதிப்பு அதிகமுள்ளது. நன்கொடை மூலம் மட்டுமே காப்பாற்ற இயலாது. பல்வேறு கலைஞர்கள் இணைந்து பூமிகா அறக்கட்டளை மூலம் 10 ஆயிரம் திரைத்துறை தொழிலாளர்களுக்கு மாதம் 1,500 ரூபாய் வீதம் ஆறு மாதங்களுக்கு வழங்குவதாக அறிவித்து கடந்த இரண்டு மாதமாக நிதியுதவி வழங்கப்படுகிறது.
இவ்வாறு கலைஞர்களை ஒருங்கிணைத்து படத்தயாரிப்பின் மூலம் திரைத்துறையையும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் காப்பாற்ற முடியும். கலைஞர்கள் வழங்கும் நன்கொடையை காட்டிலும், வாழ்நாளில் 10 நாள் கால்ஷீட்டை திரைத்துறை தொழிலாளர்களுக்கு ஒதுக்கினால் பெரிய உதவியாக இருக்கும். கொரோனா முதல் அலையின் போது நடிகர் அஜித் 25 லட்ச ரூபாய் வழங்கினார். தற்போது பெப்சிக்கு 10லட்ச ரூபாய் வழங்கியுள்ளார் அவருக்கு நன்றி.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.