ஆதங்கப்பட்ட அனுபமா பரமேஸ்வரன்... : சமாதானப்படுத்திய சுரேஷ் கோபி | நடிகை காவ்யா மாதவனின் தந்தை காலமானார் | 39வது பிறந்தநாள் கொண்டாடிய அஞ்சலி | அரசியல் என்ட்ரி : இளம் நடிகை அனந்திகாவின் ஆசை | அடுத்தடுத்து மூன்று பான் இந்தியா படங்களின் முன்னோட்ட வீடியோ போட்டி | மீண்டும் திரைக்கு வருகிறது அருண் விஜய்யின் “தடையறத் தாக்க” | விஜய் சேதுபதி படத்தில் சம்யுக்தா | 'தி ராஜா சாப்' டீசர் : தன் முந்தைய சாதனையை முறியடிக்காத பிரபாஸ் | நா.முத்துக்குமாருக்கு கரும்பு பிடிக்காதது ஏன் | ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியாக போகும் படங்கள் |
சென்னை : அரசு அறிவிக்கும் வரை படப்பிடிப்பு நடத்தப்படாது என தயாரிப்பாளர் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் குறைந்த பின், அரசு அனுமதிக்கும் போது படப்பிடிப்பு பணிகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரஜினியின் அண்ணாத்த, அஜித்தின் வலிமை, விஜய், விக்ரம், சூர்யா, கமல், சிவகார்த்திகேயன் ஆகியோரின் புதுப்படம் உள்ளிட்ட, 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான படங்கள், முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலர் ராதாகிருஷ்ணன் வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: சின்னத்திரை மற்றும் சினிமா படப்பிடிப்பை தொடர்ந்து நடத்த அமைச்சரிடம் வேண்டினோம். ஆனால் கொரோனா தொற்று அதிகம் பாதித்துள்ள நிலையில், முதல்வர் அறிவித்துள்ள ஊரடங்கை தமிழ் திரையுலகமும் கடைபிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், ஊரடங்கு காலத்தில் திரைத்துறை சார்ந்த எந்த பணிகளையும் செய்வதில்லை என முடிவு எடுத்துள்ளோம். கொரோனா பரவல் குறையும் போது, அரசு அறிவிக்கும் தளர்வுக்கு பின் திரைப்பட பணிகள் தொடரும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.