ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு நேற்று சில புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி இரவு நேரங்களில் ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் நாளை(ஏப்., 20) முதல் அமலாக உள்ளது.
இதனால் தியேட்டர்களில் இரவு நேரக் காட்சிகள் நடைபெற முடியாது. ஏற்கெனவே 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதோடு ஞாயிற்றுக்கிழமைகளில் தான் மக்கள் தியேட்டர்களுக்கு அதிகமாக வருவார்கள். அன்றைய தினம் முழு ஊரடங்கு என்பதால் யாரும் வர முடியாது.
இந்நிலையால் தாங்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகக் கூறி தற்போது விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கிற்கு எதிர்பப்புத் தெரிவித்து தியேட்டர்காரர்கள் தியேட்டர்களை மூட முடிவு செய்ய உள்ளனராம். இது பற்றி தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்துத் தெரிவித்தார். நாளை அவர்கள் கலந்து பேசி முடிவுகளை அறிவிக்க உள்ளதாகவும் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், ஏற்கெனவே 112 தியேட்டர்கள் மூடப்பட்டுவிட்டதாகவும், இன்னும் 200 தியேட்டர்கள் மூடும் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
தியேட்டர்கள் மூடப்பட்டால் 50 சதவீத இருக்கைகள் இருந்தாலும் படங்களை வெளியிடத் தயாராக இருக்கும் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவார்கள். கடந்த ஒரு வருட காலமாகவே தத்தளித்து வரும் தமிழ்த் திரையுலகம் தற்போதைய கொரானோ பரவல் காரணமாக மேலும் பாதிப்படையும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது.