படுகவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட ஜெனிபர் | ஜுனியர் என்டிஆருக்கு வாழ்த்து சொன்ன பவன் கல்யாண் | தெலுங்கு பட ஷூட்டிங்கில் ரச்சிதா மகாலெட்சுமி | 'சத்யா' காட்சியைப் பகிர்ந்து கவியூர் பொன்னம்மாவுக்கு கமல்ஹாசன் இரங்கல் | சுதா சந்திரன் பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் குழுவினர் | சீக்கிரமே அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிடுவேன் - ராஜலெட்சுமி பேட்டி | 160 படங்களைக் கடந்த 2024 ரிலீஸ், 6 படங்கள் மட்டுமே 100 கோடி வசூல் | வித்தியாசமா கூவுறாங்க! மணிமேகலை வெளியிட்ட நறுக் வீடியோ | சீரியலிலும் அட்ஜெஸ்ட்மென்ட் இருக்கு - நிமிஷிகா பளீச் பேட்டி | சிம்பு நடிக்க இருந்த படத்தில் ரஜினியா? |
கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு நேற்று சில புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி இரவு நேரங்களில் ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் நாளை(ஏப்., 20) முதல் அமலாக உள்ளது.
இதனால் தியேட்டர்களில் இரவு நேரக் காட்சிகள் நடைபெற முடியாது. ஏற்கெனவே 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதோடு ஞாயிற்றுக்கிழமைகளில் தான் மக்கள் தியேட்டர்களுக்கு அதிகமாக வருவார்கள். அன்றைய தினம் முழு ஊரடங்கு என்பதால் யாரும் வர முடியாது.
இந்நிலையால் தாங்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகக் கூறி தற்போது விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கிற்கு எதிர்பப்புத் தெரிவித்து தியேட்டர்காரர்கள் தியேட்டர்களை மூட முடிவு செய்ய உள்ளனராம். இது பற்றி தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்துத் தெரிவித்தார். நாளை அவர்கள் கலந்து பேசி முடிவுகளை அறிவிக்க உள்ளதாகவும் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், ஏற்கெனவே 112 தியேட்டர்கள் மூடப்பட்டுவிட்டதாகவும், இன்னும் 200 தியேட்டர்கள் மூடும் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
தியேட்டர்கள் மூடப்பட்டால் 50 சதவீத இருக்கைகள் இருந்தாலும் படங்களை வெளியிடத் தயாராக இருக்கும் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவார்கள். கடந்த ஒரு வருட காலமாகவே தத்தளித்து வரும் தமிழ்த் திரையுலகம் தற்போதைய கொரானோ பரவல் காரணமாக மேலும் பாதிப்படையும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது.