செப்டம்பரில் ‛வா வாத்தியார்' படத்தை வெளியிட திட்டம்! | ஹீரோவாக நடிக்கும் படத்திற்காக தற்காப்பு கலை பயிற்சி பெறும் லோகேஷ் கனகராஜ்! | தெலுங்கானா மாநில சினிமா விருதுகள்: நேரில் விருது பெற்ற அல்லு அர்ஜுன் | அப்பாவை அப்படி பார்த்தது மகிழ்ச்சி: கீர்த்திபாண்டியன் நெகிழ்ச்சி | கவிஞர்.நா.முத்துக்குமார் இசைச்கச்சேரி: கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் பங்கேற்பு | மணிரத்னத்தை மறுத்தாரா ரஜினி? | விரைவில் இயக்குனராகும் பார்த்திபன் மகன் ராதாகிருஷ்ணன் | தயாராகிறார் அடுத்த கேப்டன் | நட்பு வட்டார படங்களில் நடிப்பு: புலம்பும் நடிகை | கலையும் கருணையும்... அருண்மொழி தேவன் |
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் அஞ்சலி. அவர் தெலுங்கில் நடித்துள்ள 'வக்கீல் சாப்' படம் நாளை வெளியாக உள்ளது. அப்படத்தில் நடித்துள்ள மற்றொரு நடிகையான நிவேதா தாமஸ் கொரானோ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அஞ்சலியும் கொரானோ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சிலர் வதந்திகளைப் பரப்பியுள்ளனர்.
இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் அஞ்சலி. “எனது நலம் விரும்பிகளுக்கும், நண்பர்களும், அன்பான ரசிகர்களுக்கும், எனக்கு கொரானோ பாதிப்பு இல்லை, என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்குக் கொரானோ என சில செய்திகள், இணையதங்களில் வெளிவந்துள்ளன என்பது என் கவனத்திற்கு வந்துள்ளது. எனக்கு கொரானோ பாசிட்டிவ் என்பது முற்றிலும் தவறான ஒரு தகவல். நான் முற்றிலும் நலமாகவும், பாதுகாப்பாகவும், உள்ளேன். நீங்களும் பாதுகாப்பாகவும், கவனமாகவும் இருங்கள்,” எனத் தெரிவித்துள்ளார்.