டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

கொரோனாவின் அடுத்த அலை மிகவும் தீவிரமாகிக் கொண்டு வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் அதன் தாக்கம் அதிகமாக இருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
கிரிக்கெட் வீரர்கள், சினிமா பிரபலங்கள் அடுத்தடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தங்களை தனிமைப்படுத்திக் கொண்டும், மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டும் வருகிறார்கள். ஏற்கனவே ஆமீர்கான், ஆலியாபட், அக்ஷய் குமார் ஆகியோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது புதிதாக ஹிந்தி நடிகர்கள் கோவிந்தா, விக்கி கவுசல், பூமி பெட்னெகர் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே, நடிகர் அக்ஷய்குமார் பாதிக்கப்பட்டு தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதாக தெரிவித்து இருந்தார். இப்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சினிமா பிரபலங்களை அடுத்தடுத்து கொரோனா தாக்கி வருவதால் பாலிவுட் பிரபலங்கள் அதிர்ச்சியில் உள்ளனர். அனைரும் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி பலரும் கேட்டு வருகிறார்கள்.