படுகவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட ஜெனிபர் | ஜுனியர் என்டிஆருக்கு வாழ்த்து சொன்ன பவன் கல்யாண் | தெலுங்கு பட ஷூட்டிங்கில் ரச்சிதா மகாலெட்சுமி | 'சத்யா' காட்சியைப் பகிர்ந்து கவியூர் பொன்னம்மாவுக்கு கமல்ஹாசன் இரங்கல் | சுதா சந்திரன் பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் குழுவினர் | சீக்கிரமே அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிடுவேன் - ராஜலெட்சுமி பேட்டி | 160 படங்களைக் கடந்த 2024 ரிலீஸ், 6 படங்கள் மட்டுமே 100 கோடி வசூல் | வித்தியாசமா கூவுறாங்க! மணிமேகலை வெளியிட்ட நறுக் வீடியோ | சீரியலிலும் அட்ஜெஸ்ட்மென்ட் இருக்கு - நிமிஷிகா பளீச் பேட்டி | சிம்பு நடிக்க இருந்த படத்தில் ரஜினியா? |
கொரோனா இரண்டாவது அலை தற்போது இந்தியாவில் மிக வேகமாக பரவி வருகிறது. இதில் மகாராஷ்டிராவில் தான் அதிகம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக மும்பையில் வசிக்கும் பாலிவுட் நடிகர்களான அக்ஷய் குமார், ஆலியா பட், அமீர்கான் உள்ளிட்ட பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் அக்ஷய் குமார், தான் நடித்து வரும் ராம்சேது படப்பிடிப்பின்போது, தனக்கு கொரோனா பாசிட்டிவ் அறிகுறிகள் தெரிந்ததால், தன்னை தனிமைப்படுத்தி கொண்டதுடன் தற்போது மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சையும் பெற்று வருகிறார். மேலும் கடந்த சில நாட்களில் தன்னை சந்தித்த நபர்களையும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளவும் வலியுறுத்தினார்
அந்த வகையில் ராம்சேது படத்தில் அக்ஷய் குமாருடன் இணைந்து நடித்த நூற்றுக்கணக்கான துணை நடிகர்களில் 45 பேருக்கு கொரோனா பாசிடிவ் என்கிற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் விக்ரம் மல்ஹோத்ரா கூறும்போது, படப்பிடிப்பில் நுழைவதற்கு முன் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டே அவர்கள் அனுமதிக்கப்பட்டனர் ஆனாலும் இத்தனை பேருக்கு எப்படி பரவியது என்று தெரியவில்லை என்கிறார் அதிர்ச்சி விலகாமல்.