மம்முட்டியை தொடர்ந்து தனது வீட்டையும் சுற்றுலா பயணிகளுக்கு வாடகைக்கு விட்ட மோகன்லால் | திருப்பதி அடிவாரத்தில் நடுரோட்டில் பிச்சை எடுக்க வைத்து விட்டார் சேகர் கம்முலா! வைரலாகும் தனுஷின் வீடியோ | ஜூனியர் என்டிஆர்-க்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த்! | கவர்ச்சிக்கு நோ சொல்லும் ரக்ஷிதா | மலேசியாவில் ஓய்வெடுக்கும் பாரதிராஜா | நெல் ஜெயராமன் மகனுக்கு உதவும் சிவகார்த்திகேயன் | ஆசியாவிலேயே மிகப்பெரிய செட் எது தெரியுமா? | விறுவிறுப்பாக நடந்து வரும் 'கூலி' வியாபாரம் | 'தக் லைப்' விவகாரம் : கன்னட அமைப்புகளுக்கு கர்நாடக துணை முதல்வர் வேண்டுகோள் | அதர்வாவுக்கு திருப்பத்தைத் தருமா 'டிஎன்ஏ'? |
கொரோனா இரண்டாவது அலை தற்போது இந்தியாவில் மிக வேகமாக பரவி வருகிறது. இதில் மகாராஷ்டிராவில் தான் அதிகம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக மும்பையில் வசிக்கும் பாலிவுட் நடிகர்களான அக்ஷய் குமார், ஆலியா பட், அமீர்கான் உள்ளிட்ட பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் அக்ஷய் குமார், தான் நடித்து வரும் ராம்சேது படப்பிடிப்பின்போது, தனக்கு கொரோனா பாசிட்டிவ் அறிகுறிகள் தெரிந்ததால், தன்னை தனிமைப்படுத்தி கொண்டதுடன் தற்போது மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சையும் பெற்று வருகிறார். மேலும் கடந்த சில நாட்களில் தன்னை சந்தித்த நபர்களையும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளவும் வலியுறுத்தினார்
அந்த வகையில் ராம்சேது படத்தில் அக்ஷய் குமாருடன் இணைந்து நடித்த நூற்றுக்கணக்கான துணை நடிகர்களில் 45 பேருக்கு கொரோனா பாசிடிவ் என்கிற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் விக்ரம் மல்ஹோத்ரா கூறும்போது, படப்பிடிப்பில் நுழைவதற்கு முன் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டே அவர்கள் அனுமதிக்கப்பட்டனர் ஆனாலும் இத்தனை பேருக்கு எப்படி பரவியது என்று தெரியவில்லை என்கிறார் அதிர்ச்சி விலகாமல்.