ஒவ்வொரு இந்தியன் மீதும் தொடுக்கப்பட்ட தாக்குதல் ; நடிகர் சோனு சூட் வேதனை | புகை பிடித்தல் மற்றும் மதுவுக்கு எதிரான வாசகங்கள் படம் பார்க்கும் மூடை கெடுக்கிறது : அனுராக் காஷ்யப் | வசூல் சண்டையை ஆரம்பித்த 'ஹிட் 3' : பதிலடி கொடுத்த 'ரெட்ரோ' | சிம்பு, சந்தானம் இணையும் படம் நாளை படப்பூஜை | டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் யார் தெரியுமா? | விராட் கோலியாக எஸ்டிஆர், அனுஷ்கா சர்மாவாக திரிஷா? | மீண்டும் ரஜினி, சுந்தர்.சி கூட்டணி? | பல ஆண்டுகளுக்குபின் பேட்டி கொடுத்த விஜய், அஜித் : இந்த மாற்றம் தொடருமா? | ரூ.100 கோடியை தொடுமா ரெட்ரோ? | தொடரும் இயக்குனர் இயக்கத்தில் பஹத் பாசில் |
கொரோனாவின் இரண்டாவது அலை எதிர்பார்த்ததை விட வேகமாக பரவி வருகிறது. திரைப்பிரபலங்கள் பலரும் இந்நோய்க்கு ஆளாகி வருகின்றனர். பாலிவுட் நடிகர் ஆமிர் கான், நடிகை ஆலியா பட் உள்ளிட்டோர் சமீபத்தில் இந்நோய் தொற்றுக்கு ஆளான நிலையில் இப்போது மற்றுமொரு முன்னணி நடிகரான அக்ஷய் குமாரும் இந்நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளார்.
இதுகுறித்து டுவிட்டரில் அவர் பதிவிட்டதாவது : ‛‛இன்று(ஏப்., 4) காலை எனக்கு கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டது. கொரோனா விதிமுறைகளை பின்பற்றி உடனடியாக என்னை நானே வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டேன். உரிய மருத்துவ சிகிச்சையும் பெற்று வருகிறேன். சமீபத்தில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்களும் தயவு செய்து பரிசோதனை செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன். விரைவில் இதிலிருந்து மீண்டு வருவேன்'' என தெரிவித்துள்ளார் அக்ஷய்.