என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் | ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | காதலில் கரைபவர் வெகு சிலரே : தனுஷின் ‛தேரே இஷ்க் மே' டீசர் வெளியீடு | கமல் பிறந்தநாள் : ரீ-ரிலீஸாகும் ‛நாயகன்' | படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் |
டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் இடம் பெற்ற கோவிந்தா பாடல் காட்சிகளை நீக்கி படத்தை வெளியிட்டுள்ளது படக்குழு. அந்த பாடலுக்கு திருப்பதி தேவஸ்தானத்தை சேர்ந்த அறங்காவலர் பானு பிரகாஷ், திருப்பதியை சேர்ந்த ஜனசேனா கட்சி நிர்வாகிகள், தமிழகத்தில் சேலத்தை சேர்ந்த வக்கீல்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உலகம் முழுவதிலும் உள்ள திருப்பதி பெருமாள் பக்தர்களும் கொதித்தனர்.
இதற்கிடையே, வேறுவகையிலும் சந்தானம் மற்றும் படக்குழுவுக்கு எதிர்ப்பு வந்துள்ளது. படத்தை நடிகர் ஆர்யாவின் பட நிறுவனம் மற்றும் நிகாரிகா என்டர்டெயின்ட்மென்ட் இணைந்து தயாரித்துள்ளது. இதில் நிகாரிகா நிறுவனம் ஆந்திராவை சேர்ந்தது. நமது மாநிலத்தை சேர்ந்த நிறுவனம் தயாரிக்கும் படத்தில் ஒரு தெலுங்குகாரர் தயாரிக்கும் படத்தில் திருப்பதி பெருமாள் நாமத்தை கொச்சை படுத்தலாமா? அந்த பாடல் படத்தில் இருந்தால் உங்கள் நிறுவனத்துக்கு கடும் பாதிப்பு ஏற்படும். நீங்கள் தயாரிக்கும் தெலுங்கு படங்களுக்கும் சிக்கல் ஏற்படும் என்று பல மூத்த தெலுங்கு தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை விடுத்தார்களாம்.
தவிர, சந்தானம், ஆர்யாவிடம் ''இந்த படம் மட்டுமல்ல, அடுத்து நீங்க தயாரிக்கும் படங்களை கூட ஆந்திரா, தெலுங்கானாவில் ரிலீஸ் செய்ய முடியாது. கடுமையான பொருளாதார இழப்பு ஏற்படும்'' என்று சினிமா நண்பர்கள் சொல்ல, இவ்வளவு சிக்கல்களா என பயந்து அந்த பாடலை முழுமையாக நீக்கிவிட்டார்களாம். அந்த பாடல் நீக்கத்தால் நிறுவனத்துக்கு பல லட்சம் இழப்பு.