'மஞ்சும்மேல் பாய்ஸ்' தயாரிப்பாளருக்கு நீதிமன்றத்தில் ஆஜராக ஒரு வாரம் அவகாசம் நீட்டிப்பு | அப்படி செய்ய மாட்டேன் என பிடிவாதமாக நின்றார் நயன்தாரா ; பிரமிக்கும் யோகி பாபு | பஹத் பாசிலின் 'கராத்தே சந்திரன்' துவங்குவது எப்போது? | அஜித், சிவகார்த்திகேயன் படங்களில் மோகன்லால் | வெற்றி மட்டுமே பேசப்படும்: இது திரிஷா தத்துவம் | ரஜினி 50வது ஆண்டில் 2 படங்கள்: ஆயிரம் கோடியை அள்ளவும் பிளான் | 'குபேரா'வில் 'சமீரா' பற்றி ராஷ்மிகா மந்தனா நீளமான பதிவு | படத்தில் நடிக்கும் அனைவருக்கும் 'ஸ்கிரிப்ட்' கொடுக்க வேண்டும்: விக்ரம் பிரபு வேண்டுகோள் | நாயகியான செய்தி வாசிப்பாளர் | புதிய கதையில் வெளிவரும் 'ஜூராசிக் பார்க்' |
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் - சூர்யா கூட்டணியில் வெளிவந்த 'கஜினி, ஏழாம் அறிவு' ஆகிய இரண்டு படங்களும் தமிழ் சினிமாவில் குறிப்பிடும்படியான படங்களாக அமைந்தன. அந்தக் கூட்டணி கடந்த 10 வருடங்களாக மீண்டும் இணையாமல் உள்ளது. விஜய்யின் 65வது படத்தை முருகதாஸ் தான் முதலில் இயக்கப் போவதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால், சில காரணங்களால் அவர் அந்தப் படத்திலிருந்து விலகிவிட்டார்.
இதனிடையே, தன்னுடைய அடுத்த படத்தை மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்க வேண்டும் என முருகதாஸ் முடிவெடுத்துள்ளதாகச் சொல்கிறார்கள். மீண்டும் அவரும் சூர்யாவும் இணையும் படமாகவும் அது இருக்கலாம் என்கிறார்கள். அந்தப் படத்தை உலக அளவில் கொண்டு சேர்க்கக் கூடிய படமாக உருவாக்க முருகதாஸ் திட்டமிட்டுள்ளார் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' படத்தில் நடிக்கப் போகிறார். அவற்றை முடித்துவிட்டு முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிப்பார் என்றும் சொல்கிறார்கள்.