காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் - சூர்யா கூட்டணியில் வெளிவந்த 'கஜினி, ஏழாம் அறிவு' ஆகிய இரண்டு படங்களும் தமிழ் சினிமாவில் குறிப்பிடும்படியான படங்களாக அமைந்தன. அந்தக் கூட்டணி கடந்த 10 வருடங்களாக மீண்டும் இணையாமல் உள்ளது. விஜய்யின் 65வது படத்தை முருகதாஸ் தான் முதலில் இயக்கப் போவதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால், சில காரணங்களால் அவர் அந்தப் படத்திலிருந்து விலகிவிட்டார்.
இதனிடையே, தன்னுடைய அடுத்த படத்தை மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்க வேண்டும் என முருகதாஸ் முடிவெடுத்துள்ளதாகச் சொல்கிறார்கள். மீண்டும் அவரும் சூர்யாவும் இணையும் படமாகவும் அது இருக்கலாம் என்கிறார்கள். அந்தப் படத்தை உலக அளவில் கொண்டு சேர்க்கக் கூடிய படமாக உருவாக்க முருகதாஸ் திட்டமிட்டுள்ளார் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' படத்தில் நடிக்கப் போகிறார். அவற்றை முடித்துவிட்டு முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிப்பார் என்றும் சொல்கிறார்கள்.