கேரளாவை தொடர்ந்து ஹிந்தியிலும் சென்சார் போர்டு சிக்கலில் ஜானகி டைட்டில் | தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்! | என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் | ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | காதலில் கரைபவர் வெகு சிலரே : தனுஷின் ‛தேரே இஷ்க் மே' டீசர் வெளியீடு |
'ரெட்ரோ' படத்தை அடுத்து ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்த முடித்துள்ள படம் 'கருப்பு'. அவருக்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கும் இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியாகிறது. இதே நாளில் சுந்தர். சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் புதிய படத்தையும் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். இவர்கள் கூட்டணியில் உருவாகி நீண்ட காலமாக கிடப்பில் கிடந்த 'மத கஜ ராஜா' படம் கடந்த பொங்கல் தினத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது.
இந்நிலையில் கார்த்தியை வைத்து தான் இயக்கவிருந்த படம் கைவிடப்பட்டதால் அவருக்கு பதிலாக அடுத்து விஷாலை இயக்கப் போகிறார் சுந்தர்.சி. இந்த படத்தை மூன்றே மாதங்களில் முடித்து அடுத்த ஆண்டு தமிழ் புத்தாண்டு தினத்தில் திரைக்கு கொண்டு வருவதற்கும் திட்டமிட்டுள்ளார் சுந்தர்.சி. தற்போது நயன்தாரா நடிப்பில் 'மூக்குத்தி அம்மன் -2' படம் இறுதிக்கட்டத்தை எட்டி விட்டதால் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் நவம்பர் மாதம் விஷால் நடிக்கும் புதிய படத்தை தொடங்குகிறார் சுந்தர்.சி.