மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சூர்யா. அவரது மனைவி நடிகை ஜோதிகாவுடன் இணைந்து '2 டி என்டர்டெயின்மென்ட்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை ஏற்கெனவே நடத்தி வருகிறார். அது மட்டுமல்லாது அவரது உறவினர்கள் சிலரும் தனித் தனியாக தயாரிப்பு நிறுவனங்களை நடத்தி வருகிறார்கள். அவற்றிலும் சூர்யா குடும்பத்தினரின் பங்கு இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. அப்பட நிறுவனங்கள் தயாரிக்கும் படங்களில் மட்டும்தான் சமீப காலங்களில் சூர்யா, கார்த்தி ஆகியோர் நடித்து வருகிறார்கள்.
இந்நிலையில் புதிதாக ஒரு தயாரிப்பு நிறுவனத்தை சூர்யா ஆரம்பிக்க உள்ளதாகத் தெரிகிறது. 'ழகரம் ஸ்டுடியோஸ்' என்ற பெயரில் அந்த நிறுவனம் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். அதன் முதல் தயாரிப்பாக மலையாள இயக்குனர் ஜீத்து மாதவன் இயக்க உள்ள படமும், இரண்டாவது தயாரிப்பாக பா ரஞ்சித் இயக்க உள்ள படமும் தயாராகும் எனத் தெரிகிறது. இரண்டு படங்களிலும் சூர்யா தான் கதாநாயகனாக நடிக்க உள்ளார்.
சூர்யா தற்போது தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தன்னுடைய 46வது படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தை முடித்ததும் மேலே குறிப்பிட்ட படங்கள் அடுத்தடுத்து நடக்கும் எனத் தெரிகிறது. 'வாடிவாசல்' படம் எப்போது ஆரம்பமாகும் என்பது தொடர் கேள்வியாகவே உள்ளது.