ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
மலையாள ஆக்ஷன் ஹீரோ சுரேஷ் கோபி. தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார். அரசியலிலும் தீவிர ஈடுபாடு கொண்டவர். தற்போது அவர் பாரதிய ஜனதாக கட்சியில் இருக்கிறார். வருகிற சட்டசபை தேர்தலில் திருச்சூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில் சுரேஷ்கோபி நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சுரேஷ்கோபி தற்போது பாப்பன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனை ஜோஷி இயக்குகிறார். இதன் படப்பிடிப்புகள் எர்ணாகுளத்தை சுற்றி உள்ள பகுதிகளில் நடந்து வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு படப்பிடிப்பில் கலந்து கொண்ட சுரேஷ் கோபிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு நெகட்டிவ் ரிசல்ட் வந்தது. ஆனால் அவருக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டிருப்பது பின்னர் தெரியவந்தது. தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை தேறி வருவதாக கூறப்படுகிறது. இன்னும் ஓரிரு நாளில் அவர் தேர்தல் பணிகளை கவனிப்பார் என்று தெரிகிறது.