நம்ப முடியவில்லை : ‛கீதா கோவிந்தம்' குறித்து ராஷ்மிகா மகிழ்ச்சி பதிவு | 78 கோடியில் சொகுசு பங்களா வாங்கிய தனுஷ் பட நடிகை | அஜித் 64வது படம் எந்த மாதிரி கதை : ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட தகவல் | கூலி படத்தில் அமீர்கானை வீணடித்து விட்டார்கள் : ரசிகர்கள் ஆதங்கம் | ஆகஸ்ட் 22-ல் ஓடிடியில் வெளியாகும் தலைவன் தலைவி | லிவ்-இன் உறவுகள் பெண்களுக்கு தீங்கு விளைவிக்கும் : கங்கனா | அப்படி நடித்ததால் ரசிகர்கள் வெறுத்தனர் : அனுபமா பரமேஸ்வரன் | சினிமாவில் 50... வாழ்த்திய பிரதமர் மோடி : நன்றி தெரிவித்த ரஜினி | கூலி படத்தில் மிரட்டிய சவுபின் ஷாகிர், ரச்சிதா ராம் : இவங்க பின்னணி தெரியுமா? | சில கோடி செலவில் ‛கேப்டன் பிரபாகரன்' ரீ ரிலீஸ் : கில்லி மாதிரி வெற்றியை கொடுக்கமா? |
பிரபல காமெடி நடிகர் மயில்சாமி சென்னை விருகம்பாக்கத்தில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். எம்ஜிஆரின் தீவிர ரசிகரான மயில்சாமி, ஜெயலலிதா மரணம் அடையும் வரை அதிமுகவில் இருந்தார். பின்னர் அக்கட்சியில் இருந்து வெளியேறியவர் தற்போது சுயேட்சையாக போட்டியிடுகிறார். விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட தேர்தல் அலுவலரிடம் மனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசினார் மயில்சாமி.
அவர் கூறுகையில், ''நான் எம்ஜிஆரின் தீவிர பக்தன். பல ஆண்டுகாலம் அவரின் அரசியலை பார்த்தவன். தற்போது உள்ள சூழ்நிலையில் நான் கொதித்து போய் தான் களத்தில் இறங்கி உள்ளேன். அரசியலில் பலரும் சுயநலமாகவே செயல்படுகின்றனர். நான் இந்த ஏரியா மக்களிடம் பல ஆண்டுகளாக பழகி உள்ளேன். என்னிடம் காசு, பணம் இல்லை. அன்பு மட்டுமே உள்ளது. ரொம்ப சாதாரணமானவன். கமல் முதல் பலரும் என் நட்பு வட்டத்தில் இருந்தாலும் நான் எங்கும் செல்லவில்லை. எம்.ஜி.ஆர் பெயரை பயன்படுத்தி ஓட்டு கேட்க மாட்டேன்'' என்றார்.