ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் | 2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? |
பிரபல காமெடி நடிகர் மயில்சாமி சென்னை விருகம்பாக்கத்தில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். எம்ஜிஆரின் தீவிர ரசிகரான மயில்சாமி, ஜெயலலிதா மரணம் அடையும் வரை அதிமுகவில் இருந்தார். பின்னர் அக்கட்சியில் இருந்து வெளியேறியவர் தற்போது சுயேட்சையாக போட்டியிடுகிறார். விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட தேர்தல் அலுவலரிடம் மனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசினார் மயில்சாமி.
அவர் கூறுகையில், ''நான் எம்ஜிஆரின் தீவிர பக்தன். பல ஆண்டுகாலம் அவரின் அரசியலை பார்த்தவன். தற்போது உள்ள சூழ்நிலையில் நான் கொதித்து போய் தான் களத்தில் இறங்கி உள்ளேன். அரசியலில் பலரும் சுயநலமாகவே செயல்படுகின்றனர். நான் இந்த ஏரியா மக்களிடம் பல ஆண்டுகளாக பழகி உள்ளேன். என்னிடம் காசு, பணம் இல்லை. அன்பு மட்டுமே உள்ளது. ரொம்ப சாதாரணமானவன். கமல் முதல் பலரும் என் நட்பு வட்டத்தில் இருந்தாலும் நான் எங்கும் செல்லவில்லை. எம்.ஜி.ஆர் பெயரை பயன்படுத்தி ஓட்டு கேட்க மாட்டேன்'' என்றார்.