பராசக்தி முதல் பாடலான 'அடி அலையே' வெளியீடு | தயாரிப்பாளர்களுக்கு கூட பாடல் உரிமையை வழங்கியது இல்லை: இளையராஜா | 'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு : நவ., 8ல் முதல் பாடல் | சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு | கிஸ் முதல் நெட்வொர்க் வரை... இந்த வாரா ஓடிடி ரிலீஸ்...! | ''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான் | ரோஜா 'கம்பேக்': 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிக்கிறார் | மணிரத்னம் படம் : சிம்புவிற்கு பதில் விஜய் சேதுபதி | ரஜினிகாந்த்தை 'தலைவர்' எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன் | ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் இரண்டு படங்கள் |

நகைச்சுவை நடிகர் மயில்சாமி நேற்று அதிகாலை மாரடைப்பின் காரணமாக திடீரென மரணமடைந்தார். நேற்று காலை முதலே அவரது இல்லத்திற்கு பல சினிமா பிரபலங்கள் சென்று இறுதி மரியாதை செய்து வந்தனர்.
இந்நிலையில் இன்று காலை நடிகர் ரஜினிகாந்த், மயில்சாமிக்கு இறுதி மரியாதை செய்தார். மேலும், மயில்சாமியின் கடைசி ஆசையான சிவன் கோயிலில் பால் அபிஷேகம் செய்வேன் என்றும் சொன்னார்.
ரஜினிகாந்த், நேற்று பெங்களூருவில் அவரது அண்ணன் சத்யநாராயணாவின் 80வது பிறந்தநாள் நிகழ்வில் கலந்து கொண்டார். அங்கிருந்து சென்னை திரும்பியவர் மயில்சாமிக்கு இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
சுமார் 40 ஆண்டு காலமாக ரஜினிகாந்த், மயில்சாமி இடையே நட்பு இருந்துள்ளது. இருவரும் சிறந்த சிவ பக்தர்கள் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
விஜய், அஜித் உள்ளிட்ட சில சினிமா ஹீரோக்கள், ஹீரோயின்கள் மயில்சாமியின் மறைவுக்கு ஒரு இரங்கல் கூட தெரிவிக்காத நிலையில் ரஜினிகாந்த் போன்ற சீனியர்கள் இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளது சினிமா ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.