இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
மறைந்த நடிகர் மயில்சாமியின் உடல் சென்னையில் தகனம் செய்யப்பட்டது. வழிநெடுக ஏராளமான பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
நகைச்சுவை நடிகர் மயில்சாமி நேற்று அதிகாலை மாரடைப்பால் காலமானார். சிவராத்திரி நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு வீடு திரும்பும் வழியில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட அவரது உயிர் பிரிந்தது.
மேடை நாடகங்கள், மிமிக்கிரி, காமெடி, குணச்சித்ரம் என பல பரிமாணங்களில் மக்களை சிரிக்க வைத்தவர் மயில்சாமி. அவரின் மறைவு திரை உலகினர் மட்டுமின்றி பகுதிமக்களுக்கும் அவரால் உதவி பெற்றவர்களுக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏழைமக்களுக்கு உதவும் எண்ணம் கொண்டவராக இருந்த மயில்சாமி பலருக்கு கல்விச்செலவுக்கு பணம் வழங்கி உதவியுள்ளார். அவர் செய்த உதவிகளில் பலவற்றை வெளியே கூட சொன்னதில்லை. அந்தளவுக்கு பிறருக்கு உதவும் குணம் கொண்டவராகவும், வெள்ளைமனம் படைத்தவராகவும் இருந்தார்.
மயில்சாமியின் உடல் சென்னை, சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ரஜினிகாந்த், மனோபாலா, ஜெயராம், நடிகர் சங்கம் சார்பில் நாசர், கார்த்தி, பிரபு, விஜயகாந்த் மகன் விஜய பிரபாகர், ஆதி பினிஷெட்டி, ஸ்ரீகாந்த் தேவா, எம்எஸ் பாஸ்கர், கொட்டாச்சி உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர்கள் பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி, தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன், கமல், சரத்குமார், விக்ரம், பாரதிராஜா உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்தனர்.
அஞ்சலிக்கு பின் அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. பொதுமக்கள் வழிநெடுக கண்ணர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் ஏவிஎம் மின்மயானத்தில் வைத்து இறுதிச்சடங்குகள் மேற்கொள்ளப்பட்ட பின் உடல் தகனம் செய்யப்பட்டது.
மக்களை சிரிக்க வைத்த நாயகன் மயில்சாமி இன்று மண்ணுலகை விட்டு விடைபெற்றார்.