இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
தமிழ் சினிமா ரசிகர்கள் நடிகைகளுக்கு கோயில் கட்டுவது ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே நடிகைகள் குஷ்பு, நயன்தாரா உள்ளிட்டோருக்கு சிலர் கோயில் கட்டினார்கள். இந்நிலையில் பூமி, ஈஸ்வரன் ஆகிய இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ள நிதி அகர்வாலுக்கு ரசிகர்கள் சிலர் சிலை வைத்து கோயில் கட்டும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
இதுகுறித்து கேள்விப்பட்ட நிதி அகர்வால், ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "ரசிகர்கள் என் மீது பொழியும் உண்மையான மற்றும் நிபந்தனையற்ற அன்பை கண்டு மிகவும் உற்சாகமடைந்துள்ளேன். எப்போதும் அவர்கள் எனக்கு ஆதரவாக நின்று வருகிறார்கள். எனது ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் நிறைய தொண்டு செய்து வருகிறார்கள் என்பது பாராட்டுக்குரிய விஷயம். அதேசமயம் எனக்காக கட்டப்படும் கோயில், ஏழைகளுக்கான தங்குமிடமாகவும், உணவிடமாகவும், படிப்பளிக்கும் கூடமாகவும் இருந்தால் மிகுந்த மகிழ்ச்சியடைவேன்", என நிதி அகர்வால் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.