துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
தமிழ் சினிமா ரசிகர்கள் நடிகைகளுக்கு கோயில் கட்டுவது ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே நடிகைகள் குஷ்பு, நயன்தாரா உள்ளிட்டோருக்கு சிலர் கோயில் கட்டினார்கள். இந்நிலையில் பூமி, ஈஸ்வரன் ஆகிய இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ள நிதி அகர்வாலுக்கு ரசிகர்கள் சிலர் சிலை வைத்து கோயில் கட்டும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
இதுகுறித்து கேள்விப்பட்ட நிதி அகர்வால், ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "ரசிகர்கள் என் மீது பொழியும் உண்மையான மற்றும் நிபந்தனையற்ற அன்பை கண்டு மிகவும் உற்சாகமடைந்துள்ளேன். எப்போதும் அவர்கள் எனக்கு ஆதரவாக நின்று வருகிறார்கள். எனது ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் நிறைய தொண்டு செய்து வருகிறார்கள் என்பது பாராட்டுக்குரிய விஷயம். அதேசமயம் எனக்காக கட்டப்படும் கோயில், ஏழைகளுக்கான தங்குமிடமாகவும், உணவிடமாகவும், படிப்பளிக்கும் கூடமாகவும் இருந்தால் மிகுந்த மகிழ்ச்சியடைவேன்", என நிதி அகர்வால் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.