வெகுளித்தனமாக பதில் சொல்லி குஞ்சாக்கோ போபனுக்கு சங்கடத்தை கொண்டு வந்த டூப் ஆர்ட்டிஸ்ட் | விடாப்பிடியாக நின்று மோகன்லாலை சந்தித்த 80 வயது ரசிகை | பிளாஷ்பேக்: மொழி மாற்றம் செய்து வியாபாரப் போட்டியில் வென்று காட்டிய ஏ வி எம்மின் 'அரிச்சந்திரா' | ரஜினி பட இயக்குனர் யார் ? பரவும் தகவல்கள் | அன்பே வா, அவள் வருவாளா, நம்ம வீட்டுப் பிள்ளை - ஞாயிறு திரைப்படங்கள் | சம்பளத்திற்காக மிரட்டும் நடிகை | நான் கொடூரக்கோலத்தில் இருந்தாலும் என் கணவர் ரசிப்பார்..! கீர்த்தி சுரேஷ் ‛ஓபன்டாக்' | நிஜ போலீஸ் டூ 'பேட்பெல்லோ' வில்லன்: கராத்தே கார்த்தியின் கதை | ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? |

தமிழ் சினிமாவில் வேறு மொழிகளில் தயாராகி இங்கு தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகும் படங்களில் அதிக விலைக்கு விற்கப்பட்ட படம் 'பாகுபலி 2'.
இப்படத்தை தமிழிலும் சேர்தே படமாக்கியதாகச் சொல்வார்கள். முதல் பாகத்திலாவது சில காட்சிகளில் உதட்டசைவிற்கும், வசனத்திற்கும் பொருத்தம் இருந்தது. ஆனால், இரண்டாவது பாகத்தில் பொருத்தம் இல்லாமல் தான் இருந்தது. 'பாகுபலி' இரண்டு பாகப் படங்களையும் தெலுங்கில் மட்டுமே முழுமையாகப் படமாக்கினார்கள்.
இந்நிலையில் ராஜமௌலி தற்போது இயக்கி வரும் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் தமிழ்நாட்டு உரிமையை லைக்கா நிறுவனம் வாங்கியுள்ளது. அதன் விலை சுமார் 42 கோடி என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 'பாகுபலி 2' படத்தின் உரிமை 47 கோடியாம். அதைவிட ஐந்து கோடி குறைவு.
'பாகுபலி' படத்திலாவது தமிழ் ரசிகர்கள் தங்களைத் தொடர்புபடுத்திக் கொள்ள அது ஒரு பொதுவான சரித்திரப் படமாக இருந்தது. ஆனால், 'ஆர்ஆர்ஆர்' படம் சுதந்திரத்திற்காகப் போராடிய தெலுங்கு சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றிய படம். அது எப்படி தமிழ் ரசிகர்களை படத்துடன் தொடர்புப்படுத்தி பார்க்க வைக்கும் என இங்கு கோலிவுட்டில் கேள்வி எழுப்புகிறார்கள். 42 கோடியே அதிகம்தான் என்கிறார்கள் அனுபவசாலிகள்.




