ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது | ரெட்ரோ டிரைலர் : விதவிதமாய் 'குக்' செய்துள்ள கார்த்திக் சுப்பராஜ் | அஜித் பிறந்த நாளில் 'வீரம்' மறு வெளியீடு | உடல்நலக்குறைவு எதனால் ஏற்பட்டது : ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட தகவல் | 'மணி ஹெய்ஸ்ட்' பாதிப்பில் உருவானது கேங்கர்ஸ்: சுந்தர்.சி | பிளாஷ்பேக்: 100 படங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்த சுலக்ஷனா | பிளாஷ்பேக்: குருவாயூரப்பனை எழுப்பும் லீலாவின் குரல் |
தமிழ் சினிமாவில் வேறு மொழிகளில் தயாராகி இங்கு தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகும் படங்களில் அதிக விலைக்கு விற்கப்பட்ட படம் 'பாகுபலி 2'.
இப்படத்தை தமிழிலும் சேர்தே படமாக்கியதாகச் சொல்வார்கள். முதல் பாகத்திலாவது சில காட்சிகளில் உதட்டசைவிற்கும், வசனத்திற்கும் பொருத்தம் இருந்தது. ஆனால், இரண்டாவது பாகத்தில் பொருத்தம் இல்லாமல் தான் இருந்தது. 'பாகுபலி' இரண்டு பாகப் படங்களையும் தெலுங்கில் மட்டுமே முழுமையாகப் படமாக்கினார்கள்.
இந்நிலையில் ராஜமௌலி தற்போது இயக்கி வரும் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் தமிழ்நாட்டு உரிமையை லைக்கா நிறுவனம் வாங்கியுள்ளது. அதன் விலை சுமார் 42 கோடி என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 'பாகுபலி 2' படத்தின் உரிமை 47 கோடியாம். அதைவிட ஐந்து கோடி குறைவு.
'பாகுபலி' படத்திலாவது தமிழ் ரசிகர்கள் தங்களைத் தொடர்புபடுத்திக் கொள்ள அது ஒரு பொதுவான சரித்திரப் படமாக இருந்தது. ஆனால், 'ஆர்ஆர்ஆர்' படம் சுதந்திரத்திற்காகப் போராடிய தெலுங்கு சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றிய படம். அது எப்படி தமிழ் ரசிகர்களை படத்துடன் தொடர்புப்படுத்தி பார்க்க வைக்கும் என இங்கு கோலிவுட்டில் கேள்வி எழுப்புகிறார்கள். 42 கோடியே அதிகம்தான் என்கிறார்கள் அனுபவசாலிகள்.